42 பயணிகளை சென்னையில் தவிக்க விட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்... விமான டிக்கெட் கட்டணம் அம்போ..!
சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபாய் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 42 பயணிகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆர்.டி.பிசிஆர் சோதனை செய்து அதற்கான சான்றிதழ் தங்களிடம் இருந்தும், ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் அனுமதிப்போம் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளர்கள் கூறிவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே இந்த விவகாரத்தின் முழு விவரத்தை விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட பயணி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மேட்டூர் டூ துபாய்
''என் பெயர் நாகராஜ், நான் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து துபாய்க்கு செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.20,000 கொடுத்து டிக்கெட் பதிவு செய்திருந்தேன். டிக்கெட் முன் பதிவு செய்யும் போது ரேபிட் டெஸ்ட் கட்டாயம் என்ற தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை. அந்த சோதனை கட்டாயம் என்றால் அது குறித்த தகவலை டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே எங்களுக்கு சுட்டிக்காட்டி இருக்கலாம்.''

6 மணி நேரம்
''அப்போதெல்லாம் விட்டுவிட்டு திடீரென ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் ஏற்றுவோம் எனக் கூறி நான் உட்பட 42 பயணிகளை தவிக்கவிட்டு விட்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று விட்டது. ரேபிட் டெஸ்ட் சோதனையை பொறுத்தவரை 6 மணி நேரம் தான் அதற்கு மதிப்பு, நாங்கள் இங்கிருந்து கொழும்பு சென்று அதற்கு பிறகு துபாய் செல்வதற்குள் 6 மணி நேரத்துக்கும் மேலாகிவிடும். இது குறித்து எவ்வளவோ எடுத்துக்கூறியும் எங்களை விமானத்திற்குள் அனுமதிக்கவில்லை.''

பதில் இல்லை
''கட்டிட வேலைக்கு செல்வோர் முதல் தொழில் நிமித்தமாக செல்வோர் வரை 42 பேர் இப்போது சென்னை விமானத்தில் இருக்கிறோம். இங்குள்ள எந்த அதிகாரியும் உருப்படியாக பதில் அளிக்கவில்லை. எங்கள் டிக்கெட் கட்டணத்தை ஏஜெண்ட்கள் எப்படியும் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் 42 பேரும் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் என எனக்குத் தெரியாது, எங்களை துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத்துக்கு தான் உள்ளது.''

என்ன நியாயம்
''இதனிடையே இதே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் இருந்து துபாய்க்கு பயணிகளை அழைத்துச் சென்ற போது அங்கு பயணிகளிடம் ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் கேட்கவில்லை. கேரள பயணிகளுக்கு ஒரு நியாயம், தமிழக பயணிகளுக்கு ஒரு நியாயம் என்ற வகையில் இந்த நிறுவனம் செயல்படுவதாக கருதுகிறேன்.''
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications