Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே சம்பவம்.. மொத்த இந்தியாவையும் பதற வைத்தவர் சிக்கினார்.. கேரள ரயில் தீ வைப்பில் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய ஷாருக் சைஃபி என்பவர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது ஷாருக் ஷபி சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஷாருக் ஷபியை கைது செய்த மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்னகிரி

ரத்னகிரி

இதற்கிடையே கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், ரத்தினகிரி விரைந்துள்ளனர். தீ வைத்த ரயிலிலேயே ஷாருக் கண்ணூருக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணூரில் இருந்து மங்களூர் வழியாக ரத்தினகிரிக்கு சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

அப்போது பெட்ரோல் பட்டு பயணிகள் சிலருடைய ஆடையிலும் தீப்பிடித்துள்ளது. அதை பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார்கள். அந்த மர்ம நபர் வெளியில் குதித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

இதனிடையே தீயை பயணிகளே அணைத்துவிட்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்வே போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர். அப்போது, தண்டவாளத்தில் கிடந்த ஒரு பையைக் கைப்பற்றினர். அதில் இன்னொரு பெட்ரோல் பாட்டில் மற்றும் 2 மொபைல் போன்கள் இருந்துள்ளன. அந்த பை தப்பியோடிய மர்ம நபருடையதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

சடலமாக மீட்பு

சடலமாக மீட்பு

இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரயில் தண்டவாளத்தில் இருந்து பச்சிளம் குழந்தை, ஆண், பெண் என 3 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் தவுபிக் மற்றும் ரெஹனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டி1 பெட்டியில் பரவிய தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியில் குதித்து உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்த 8 பயணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

 உருவப்படம்

உருவப்படம்

பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உருவப்படம் வரையப்பட்டு குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட நபரை கேரள போலீசாரும், என்ஐஏ அதிகாரிகளும் தீவிரமாக தேடி வந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் , கேரள சம்பவத்திற்கு தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது. இதை எடுத்து அவரை மாலையில் விடுவித்தனர்.

சிக்கியது எப்படி?

சிக்கியது எப்படி?

கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய ஷாருக் சைஃபி என்பவர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது ஷாருக் ஷபி சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். ஷாருக் ஷபியை கைது செய்த மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+