வேகமெடுக்கும் சவுக்கு சங்கர் வழக்கு..புயல் வேகத்தில் சைபர் கிரைம் கிரைம் போலீஸ்! அடுத்தடுத்து ஆக்சன்
கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே உள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் தொடர்பான ஒரு வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக பதியப்பட்ட 15 வழக்குகள் தொடர்பாக தனித்தனி குற்றப்பத்திரிகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் சங்கர் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர் ஜாமீனில் வெளி வந்தார்.
இதற்கிடையே தன் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து கோவை நீதிமன்றத்திற்கு அனைத்து வழக்குகளும் மாற்றப்பட்டது. தொடர்ந்து கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கருக்கு எதிராக 15 புதிய வழக்குகளையும் பதிவு செய்தனர். தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது கூடுதலாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சவுக்கு சங்கர் மீது ஜேஎம் - 4 நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை பெற்று வரும் நிலையில் முதல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக குற்ற பத்திரிகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குற்ற பத்திரிக்கையும் தனித்தனியாக விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதுவரை 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்னும் 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சாட்சிகள், விசாரித்தவர்கள், புகார் கொடுத்தவர்கள் என அடுத்தடுத்த விசாரணை முடிக்கப்பட்டு சவுக்கு சங்கரிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் எனவும் கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.
-
Election Exclusive: அன்னைக்கே சொன்னாரே அன்புமணி.. திமுகவில் சேலம் அருள்? ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை! அப்போ ராமதாஸ்? -
துண்டு துண்டாக விஜய் உடைக்கும் திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக 18% வாக்குகளா? ஷாக்கிங் கணிப்புகள் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
சட்டசபை தேர்தலில் வைகோ போட்டி? எந்த தொகுதி தெரியுமா? தீப்பிடிக்க போகும் தீப்பெட்டி! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications