Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேகமெடுக்கும் சவுக்கு சங்கர் வழக்கு..புயல் வேகத்தில் சைபர் கிரைம் கிரைம் போலீஸ்! அடுத்தடுத்து ஆக்சன்

Subscribe to Oneindia Tamil

கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே உள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் தொடர்பான ஒரு வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக பதியப்பட்ட 15 வழக்குகள் தொடர்பாக தனித்தனி குற்றப்பத்திரிகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

savukku shankar covai politics

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் சங்கர் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர் ஜாமீனில் வெளி வந்தார்.

இதற்கிடையே தன் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து கோவை நீதிமன்றத்திற்கு அனைத்து வழக்குகளும் மாற்றப்பட்டது. தொடர்ந்து கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கருக்கு எதிராக 15 புதிய வழக்குகளையும் பதிவு செய்தனர். தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது கூடுதலாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

சவுக்கு சங்கர் மீது ஜேஎம் - 4 நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை பெற்று வரும் நிலையில் முதல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக குற்ற பத்திரிகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குற்ற பத்திரிக்கையும் தனித்தனியாக விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

இதுவரை 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்னும் 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சாட்சிகள், விசாரித்தவர்கள், புகார் கொடுத்தவர்கள் என அடுத்தடுத்த விசாரணை முடிக்கப்பட்டு சவுக்கு சங்கரிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் எனவும் கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+