காரமடை எல்லை கருப்பசாமி கோயிலில் சித்தர்கள் தூணுக்கு சிறப்பு பூஜை: ஆளுநர் ஆர்என் ரவி தரிசனம்
கோவை: கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லை கருப்பராயன் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார். 18 அடி உயரமுள்ள சித்தர்கள் தூணுக்கு நடைபெறற சிறப்பு அபிஷேக பூஜையில் ஆளுநர் கலந்துகொண்டார்.
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லை கருப்பராயன் கோவிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில், இன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இக்கோயிலில் 120 நாட்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கோவிலின் கும்பாபிஷேகத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 18 அடி உயரமுள்ள சித்தர்கள் தூணுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் சத்தி சாலை, கோவில்பாளையம், குப்பேபாளையம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த சிறப்பு பூஜையில் கோவையை சேர்ந்த நடிகை மீனா, நடன இயக்குனர் கலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications