பொள்ளாச்சியில் கள்ளச்சாராயம்? மது குடித்தவர்கள் மயங்கியதால் அதிர்ச்சி.. என்ன நடந்தது? போலீஸ் விசாரணை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது குடித்த 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் மஞ்ச நாயக்கனூர் என்ற மலை அடிவார கிராமம் உள்ளது. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். கட்டட தொழிலாளிகளான மகேந்திரன், ரவி ஆகிய இருவரும் நேற்று மது குடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மது அருந்திய இருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததாக தகவல் பரவியது. அண்மையில் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 200க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர்களில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், பொள்ளாச்சி அருகே மது குடித்த இருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, இந்த தகவல் அறிந்து வால்பாறை டிஎஸ்பி ஸ்ரீநிதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் விசாரணை நடத்தினர்.
மது அருந்திய ரவிச்சந்திரனுக்கு ரத்த அழுத்த பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். மகேந்திரனுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக மது அருந்தவில்லை என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே திருப்பூர், கோவை போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருவதாக மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்தார். முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது கள்ளச்சாராயம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் பொள்ளாச்சி அருகே இருவர் மது குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications