Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை.. இந்து முன்னணி நிர்வாகி வீடுகள் மீது குண்டு வீச்சு! சிக்கிய பிஎஃப்ஐ நிர்வாகிகள்! 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, பொள்ளாச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையும் அமலாக்கத் துறையும் சோதனை நடத்தியது.

சுமார் 11 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டம், சாலை மறியலை நடத்தினர்.

கோவை பாஜக அலுவலகம்

கோவை பாஜக அலுவலகம்

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி கோவையில் சித்தாபுதூர் என்ற பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அது போல் கோவை காந்திபுரத்தில் இருந்த துணிக் கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான வெல்டிங் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்து முன்னணி

இந்து முன்னணி

அந்த துணிக் கடையும் இந்து முன்னணியினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அது போல் பொள்ளாச்சியில் பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

ஆட்டோக்கள் சேதம்

ஆட்டோக்கள் சேதம்

இதில் இரு கார், இரு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கேன்கள், வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல்களை விற்பனை செய்யக் கூடாது என தென் மண்டல பகுதிகளுக்கு காவல் துறை சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டது.

3 பேர் கைது

3 பேர் கைது

கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இந்து அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்ட மேற்கு காவல் நிலைய சரகத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி குமரன் நகரில் அமைந்துள்ள இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 நான்கு சக்கர வாகனம், 2 ஆட்டோக்கள், ஒரு டாட்டா ஏசர் வாகனத்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியும் மேற்படி 2 வாகனங்களின் மீது டீசலை ஊற்றியும் உள்ளனர்.

ஆய்வு

ஆய்வு

இது சம்பந்தமாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கைது செய்யும் பொருட்டு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் உத்தரவின் பேரில் கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வழிகாட்டுதலின் பேரிலும் பொள்ளாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் தீபா சுஜாதா தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை செய்தும் அந்த பகுதியில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் 500-க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தும் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர்.

யார் அந்த மூவர்?

யார் அந்த மூவர்?

இதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சியை சேர்ந்த ஜமால் மைஜதீன் என்பவருடைய மகன் முகமது ரபிக் (26) (ஜவுளிக் கடை தொழில்), பொள்ளாச்சியை சேர்ந்த மகாத்மா காந்தி வீதியை சேர்ந்த அக்பர் என்பவரது மகன் ரமீஸ் ராஜா (36), இசாக் என்பவருடைய மகன் மாலிக் (எ) சாதிக் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+