கோவை மாவட்டம்.. வீட்டுக்கு அருகே விளையாடிய சிறுமி.. திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை குதறி பலி!
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று சிறுத்தை தாக்கியுள்ளது. இதில் அச்சிறுமி பரிதாபமாக பலியானார்.
ஊசிமலை தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இந்நிலையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி அப்சரா என்பவரை சிறுத்தை தாக்கியதில் அந்தச் சிறுமி பலியானார்.

வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கிராமத்தில், விவசாயி வளர்த்து வந்த ஆட்டை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications