Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைனு கூட பார்க்காம.. கூலி தொழிலாளி செய்த கொடூரம்.. கோவையை அதிரவைத்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 5 வயது சிறுமியிடம் கூலி தொழிலாளி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த நபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

coimbatore crime child

மகாராஷ்டிர மாநிலம், தானேவில் இரண்டு இரட்டைச் சிறுமிகள் 4 வயதே ஆன குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். கிருஷ்ணகிரியில் என்சிசி முகாம் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இப்படி தினந்தோறும் விடிந்தாலே எதாவது ஒரு பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை கடந்து வந்து கொண்டேதான் இருக்கிறோம்.

இந்தப் பிரச்னைகள் ஒய்வதற்குள்ளேயே கோவையையே அதிர வைத்துள்ளது 5 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 45 வயதான கூலி தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கூலி தொழிலாளி ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார். விசாரணையில், காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது.

சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தவாறே அந்த கூலி தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மிகவும் அச்சமைடந்த சிறுமி தனக்கு நேர்ந்தது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் சகோதரி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, 5 வயது சிறுமியை உறவினர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் காரமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலீஸார் கூலி தொழிலாளி பத்திரசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+