கோவையில் போலீசுக்கே திருடனால் நடந்த விசித்திரம்.. ஆடிப்போக வைத்த 'எக்ஸ்சேஞ்ச்'
கோவை: கோவையில் காவல் துறையினரின் ரோந்து வாகனத்தையே திருடி வந்து, மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரின் செயல் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. காவல்துறை வாகனத்தையே திருடி வந்து, அதை 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது போல விட்டு விட்டு வேறொரு வாகனத்தைத் திருடிச் சென்ற அந்தப் பலே திருடன் யார் என காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
கோவை, சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 30-ஆம் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை வழக்கம் போல வீட்டின் அருகே உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு உறங்கச் சென்று உள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காணாமல் போன தனது வாகனத்தைத் தேடிய போது, அந்த இடத்திற்கு அருகிலேயே மற்றொரு மோட்டார் சைக்கிள் சாவியுடன் நிற்பதை அந்த இளைஞர் கவனித்தார். இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது, அங்கு சாவியுடன் நின்ற வாகனம் ரத்தினபுரி காவல் துறையினர் ரோந்து பணிக்குப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
காவல் துறையினரின் வாகனமே அங்கு நின்றதால் குழப்பம் அடைந்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர், முதலில் ரத்தினபுரி காவல் நிலையத்திற்குச் சொந்தமான ரோந்து மோட்டார் சைக்கிளை காவல் நிலையத்தில் இருந்து திருடி உள்ளார்.
அந்தப் போலீஸ் பைக்கிலேயே சிவானந்தா காலனி ராதாகிருஷ்ணன் சாலைக்கு வந்து உள்ளார். பின்னர், அந்தப் போலீஸ் பைக்கை அங்கேயே சாவியுடன் விட்டு விட்டு, அந்த நிறுத்தி இருந்த உணவக ஊழியரின் பைக்கைத் திருடிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து உள்ளார்.
காவல்துறை வாகனத்தையே திருடி வந்து, அதை 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது போல விட்டு விட்டு வேறொரு வாகனத்தைத் திருடிச் சென்ற அந்தப் பலே திருடன் யார் ? என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.போலீஸ் வாகனத்தையே திருடன் கையாண்ட விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications