கோவையில் போலீசுக்கே திருடனால் நடந்த விசித்திரம்.. ஆடிப்போக வைத்த 'எக்ஸ்சேஞ்ச்'
கோவை: கோவையில் காவல் துறையினரின் ரோந்து வாகனத்தையே திருடி வந்து, மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரின் செயல் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. காவல்துறை வாகனத்தையே திருடி வந்து, அதை 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது போல விட்டு விட்டு வேறொரு வாகனத்தைத் திருடிச் சென்ற அந்தப் பலே திருடன் யார் என காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
கோவை, சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 30-ஆம் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை வழக்கம் போல வீட்டின் அருகே உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு உறங்கச் சென்று உள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காணாமல் போன தனது வாகனத்தைத் தேடிய போது, அந்த இடத்திற்கு அருகிலேயே மற்றொரு மோட்டார் சைக்கிள் சாவியுடன் நிற்பதை அந்த இளைஞர் கவனித்தார். இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது, அங்கு சாவியுடன் நின்ற வாகனம் ரத்தினபுரி காவல் துறையினர் ரோந்து பணிக்குப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
காவல் துறையினரின் வாகனமே அங்கு நின்றதால் குழப்பம் அடைந்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர், முதலில் ரத்தினபுரி காவல் நிலையத்திற்குச் சொந்தமான ரோந்து மோட்டார் சைக்கிளை காவல் நிலையத்தில் இருந்து திருடி உள்ளார்.
அந்தப் போலீஸ் பைக்கிலேயே சிவானந்தா காலனி ராதாகிருஷ்ணன் சாலைக்கு வந்து உள்ளார். பின்னர், அந்தப் போலீஸ் பைக்கை அங்கேயே சாவியுடன் விட்டு விட்டு, அந்த நிறுத்தி இருந்த உணவக ஊழியரின் பைக்கைத் திருடிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து உள்ளார்.
காவல்துறை வாகனத்தையே திருடி வந்து, அதை 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது போல விட்டு விட்டு வேறொரு வாகனத்தைத் திருடிச் சென்ற அந்தப் பலே திருடன் யார் ? என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.போலீஸ் வாகனத்தையே திருடன் கையாண்ட விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications