குடிபோதையில் கோவையை கதிகலக்கிய வடமாநில இளைஞர்... நடுரோட்டில் படுத்து கொண்டு பாரத் மாதா கி ஜே கோஷம்!
கோவை : கோவையில் வடமாநில இளைஞர் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை கிராஸ்கட் வீதியில் நேற்று இரவு திடீரென வடமாநில இளைஞர் ஒருவர். சாலையில் படுத்து கொண்டு "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டு கொண்டிருந்தார். வாகன ஓட்டிகள் ஹாரன்கள் அடித்தும், எழுந்து செல்லும்படி கூறியும் அந்த இளைஞர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அங்கிருந்த தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் அந்த நபரை எழுப்ப முயன்றனர்.

அப்போது அந்த இளைஞர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் தனியார் நிறுவன பாதுகாவலர்களும், பொதுமக்களும் வடமாநில இளைஞரை ஒருவழியாக எழுப்பி, அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து மிகுந்த சாலை பகுதியில், மது அருந்திவிட்டு சாலையில் புரண்டபடி பாரத் மாதா கி ஜே என கோஷத்துடன் ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இளைஞரின் இந்த அநாகரீக செயல், அப்பகுதி மக்களிடையே முகம் சுளிக்க வைத்தது.












Click it and Unblock the Notifications