பிரபல நடிகரின் தம்பி திடீர் கைது.. சுற்றி வளைத்து பிடித்த கோவை போலீசார்.. என்ன நடந்தது..?
நடிகர் சுரேஷ்கோபியின் சகோதரர் மோசடி வழக்கில் கைதானார்
கோவை: நிலம் வாங்கி தருவதாக சொல்லி, தொழிலதிபரிடம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக நடிகரும், கேரள பாஜக எம்பியுமான சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபியை கோவை போலீசார் தூக்கி சிறையில் வைத்துள்ளனர்.
கேரளத் திரை உலகில் பிரபலமாக உள்ளவர், நடிகர் சுரேஷ் கோபி.. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்...
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் அனல் பறக்கும் - பிரச்சினைகளை எழுப்ப தயாராகும் எதிர்கட்சிகள்
இவருக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாவது சகோதரர்தான் சுனில்கோபி.. இவர்மீதுதான் தற்போது புகார் எழுந்துள்ளது..
அட்வான்ஸ்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கிரிதரன். இவரிடம் மதுக்கரை அருகே மாவுத்தம்பதி பகுதியில் 4.52 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாக சொல்லி, சுனில்கோபி கடந்த நவம்பர் மாதம் அணுகியுள்ளார்... அவர் காட்டிய நிலமும் பிடித்து போகவே, அதற்கு அட்வான்ஸாக 97 லட்ச ரூபாயை சுனில்கோபி அவரது நண்பர்கள் சிவதாஸ் மற்றும் ரீனா ஆகியோரது வங்கி கணக்குகளில் 97 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
நடிகர் சுரேஷ் கோபி
அதாவது, சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில் பத்திரப்பதிவு செல்லாது என்று கோர்ட் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றத் தகவலை மறைத்து, சுனில் கோபி கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு அதனை விற்றுள்ளார். அந்த நிலத்திற்குதான் கிரிதரன் அட்வான்ஸ் ரூ.97 லட்சம் தந்திருக்கிறார். அந்த நிலத்தின் ஆவணங்களை சரி பார்த்தபோதுதான், அந்த நிலம் வேறு ஒருவருடைய பெயரில் இருந்தது தெரியவந்தது.
நடிகர் சுரேஷ் கோபி தம்பி
இறுதியில், அந்த நிலத்தின் சொத்து ஆவணங்களை சரிபார்த்தபோதுதான், அதில் வில்லங்கம் இருப்பது தெரியவந்தது. எனவே, இதுகுறித்து கிரிதரன், சுனில்கோபியை கேட்டுள்ளார்.. அதற்கு சுனில்கோபியும் பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக உறுதியளித்துள்ளார்... ஆனால் பணத்தை திருப்பி தரவே இல்லையாம்.. இழுத்தடித்து கொண்டே வந்துள்ளார்.. இது குறித்து மறுபடியும் மீண்டும் கேட்டபோது தொழிலதிபர் கிரிதரனுக்கு சுனில்கோபி மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஆவணங்கள்
இதனையடுத்து சுனில் கோபி, வேறு வழியில்லாமல் சிவதாஸ், ரீனா ஆகிய பேர் மீது கிரிதரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார், கூட்டுசதி, மோசடி, நம்பிக்கை மோசடி, தவறான ஆவணங்களை தயாரித்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்த சுனில்கோபியை கைது செய்தனர்...
நடிகர் சுரேஷ்கோபி தம்பி
அதற்குள் சிவதாஸ், ரீனா இருவரும் தலைமறைவாகி விட்டனர்.. எனவே அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக, கோவை குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுனில் கோபி தற்போது ஜெயிலில் உள்ளார்.. கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபியின் சகோதரர் கைதாகி ஜெயிலுக்கு போனது கேரள - தமிழக மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.