Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக மாஜிகளுக்கு வலை.. செங்கோட்டையன் கொடுக்கும் உத்தரவாதம்.. கொங்கில் ஓட்டை போடும் தவெக!

Subscribe to Oneindia Tamil

கோவை: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளை தவெக பக்கம் கொண்டு வர செங்கோட்டையன் தீவிரமாக இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. தேர்தலின் போது செலவு செய்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று கூறினாலும், என்னை நம்பி தவெகவுக்கு வருமாறு செங்கோட்டையன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருவது அதிமுகவை அதிர செய்துள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்த ஒரு மாதத்தில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்து கொண்டார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், கொங்கு மண்டல அமைப்பாளர் பொறுப்பும் அளிக்கப்பட்டது.

Sengottaiyan TVK Edappadi Palaniswami

இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் விஜய்யை அழைத்து வந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை செங்கோட்டையன் நடத்திக் காட்டினார். இதன்பின் அதிமுக மாஜிக்களை தவெக பக்கம் கொண்டு வரும் அசைன்மென்ட் செங்கோட்டையன் வசம் அளிக்கப்பட்டது. அதேபோல் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தவெக கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தவும் செங்கோட்டையனிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது.

அதற்கேற்ப செங்கோட்டையன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவில் யாருக்கு எல்லாம் சீட் கிடைக்காதோ, யாரெல்லாம் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காமல் அதிருப்தியில் இருக்கிறார்களோ அவர்களை நேரடியாக செங்கோட்டையன் தொடர்பு கொண்டு வருகிறார்.

அண்மையில் கூட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வான பல்பாக்கி சி.கிருஷ்ணன் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்து கொண்டார். இதுபோல் இன்னும் பலரும் அதிமுகவில் இருந்து விலகி தவெக பக்கம் செல்வார்கள் என்று கணிக்கப்படுகிறது. சிலர் நேரடியாக தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை என்று கூறினாலும், என்னை நம்பி வருமாறு செங்கோட்டையன் அழைத்திருக்கிறார்.

இதனால் தேர்தல் நெருங்கும் போது அதிமுகவில் இருந்து ஒரு பெரும் படையே தவெக பக்கம் செல்லும் என்று பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் ஓட்டை போட்டு வருவது வரும் சட்டசபைத் தேர்தலில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+