மேற்கு மாவட்டங்களில் அம்பேத்கர் சிலை கூட அதிகமாக இல்லை.. கோவையில் பா.ரஞ்சித் பேச்சு!
கோவை: வட மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடிய தலைவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மேற்கு மாவட்டங்களில் அம்பேத்கர் சிலை கூட பெரும்பாலும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
கோவையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் "பாபாசாகேப் டாக்டர். அம்பேத்கரை அறிவோம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பா.ரஞ்சித், "நான் ஒரு அம்பேத்கரிஸ்ட். இது எனது அடையாளம். இதை சொல்வதில் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. நீங்கள் எப்படி கம்யூனிசத்தை ஒரு தத்துவமாக பார்க்கிறீர்களோ, அதேபோல நான் அம்பேத்கரை ஒரு தத்துவமாகப் பார்க்கிறேன்.

பெரியாரை நாங்கள் எந்த விதத்திலும் எதிரியாக பார்க்கவில்லை. பெரியாரிஸ்ட் என்று பலரும் சொல்லும்போது, நாம் ஏன் அம்பேத்கரிஸ்ட் என சொல்லக்கூடாது? சாதிக்கு எதிராக தொடர்ந்து போராடுபவர்கள் தலித்கள் தான். பா.ரஞ்சித், தனி பாதையில் சென்று ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆம், பொது அமைப்புகளில் எங்களுக்கான பங்கு கிடைக்கும் வரை நாங்கள் நாங்கள் தனி அடையாளத்தோடு தான் செல்வோம்.
கோகுல் ராஜ் படுகொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையே முதலில் தவறாக பதியப்பட்டது. கோகுல் ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததில் மகிழ்ச்சி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எளிதாக வெளியில் வருகிறார்கள்.
வட மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடிய தலைவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மேற்கு மாவட்டங்களில் அம்பேத்கர் சிலை கூட பெரும்பாலும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அம்பேத்கரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல, அவர் எல்லோருக்குமானவர். அம்பேத்கரை முன்னிலைப்படுத்துவதையே ஒரு குறிப்பிட்ட சாதிய அரசியலாக எடுத்துக்கொள்கிறார்கள். அம்பேத்கர் அனைவருக்குமானவர். அனைவருக்காகவும் உழைத்துள்ளார். " எனப் பேசியுள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications