முதல்வர் சொல்வதை ஆளுநர் செயல்படுத்த வேண்டும்.. ஈகோ பார்க்கக்கூடாது.. அன்புமணி ராமதாஸ் பேட்டி!
கோவை: கோவை விமான நிலையத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் - முதல்வர் இடையே ஈகோ இருக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "கர்நாடகாவில் நடப்பது அரசியல் கூட்டம். அதில் முதலமைச்சர் பங்கேற்கலாம். அந்தக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 10 கிலோ மீட்டருக்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆளுநர் நடுநிலையாகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட வேண்டும். முதல்வர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைச் செயல்படுத்த வேண்டியது ஆளுநரின் கடமை.
இருவருக்கும் இடையே ஈகோ இருக்கக்கூடாது. அரசியல் சார்பு இருக்கக்கூடாது. ஆளுநரின் அரசியல் சார்பு என்னவாக இருந்தாலும் அதனை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். கட்சி சார்பு கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. நீதிபதி, ஜனாதிபதி போல, ஆளுநர் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள், கொள்கைகள் பற்றி பேசக்கூடாது. தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் அதிகாரம் இருக்கிறது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications