முதல்நாள் இரவே மூடப்பட்ட அவிநாசி மேம்பாலம்.. இளைஞர்கள் குவிந்ததால் ஸ்தம்பித்த போக்குவரத்து
கோவை: கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜிடி நாயுடு (அவிநாசி மேம்பாலம்) மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். தமிழ்நாட்டின் முதல் நீளமான பாலம் என்ற பெருமையை இந்த அவிநாசி மேம்பாலம் பெற்றுள்ளது. இந்த மேம்பாலத்தில் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க குவிந்ததால் நேற்று இரவு 9 மணியளவில் மேம்பாலம் தடுப்புகளைக் கொண்டு மூடப்பட்டது.
கோவையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கல்வி, மருத்துவம், தொழில், வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இங்கு வசித்து வருகின்றனர், கோவையில் பிரதான பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதனைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அவிநாசி சாலை பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். குறிப்பாக பீக் ஹவர்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த போக்குவரத்து பிரச்சனையை சரிசெய்யும் வகையில் கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்துவைத்தார். இந்த மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவை மக்களின் நீண்ட நாள் கனவான அவிநாசி மேம்பாலம் திறக்கப்பட்டால் கோவையில் போக்குவரத்து பிரச்சனை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜிடி நாயுடு பாலம் திறக்கப்பட்ட முதல் நாள் இரவிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலேயே மிக நீளமான பாலம் என்பதால்இதையடுத்து, காவல் துறையினர் பாலத்தை இரவு 9 மணியளவில் மூடும் சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று மாலை முதலே புகைப்படம் எடுப்பதற்காகவும், வீடியோ எடுப்பதற்காகவும் குவியத் தொடங்கினர். நீளமான பாலம் என்பதால் வேகமாக வாகனங்களை இயக்கினார்கள்.
மேம்பாலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு செல்பி எடுக்கத் தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மேம்பாலத்தில் எது ஏறு தளம், இறங்கு தளம் என அறிவிப்புப் பலகைகளை வைக்கப்படாததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேம்பாலத்திலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவிநாசி பழைய மேம்பாலம், புதிய மேம்பாலம் பகுதியை இணைக்கும் பகுதியான உப்பிலிபாளையத்தில் மிகப்பெரிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பெரிய ரவுண்டானா என்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேம்பாலம் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியதாவது: "ஜிடி நாயுடு மேம்பாலம் நேற்று திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலேயே நீண்ட பாலம் என்பதால் மக்கள் பாலத்தை பார்வையிட ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் சிறிது தூரம் பயணித்துவிட்டு யூடர்ன் செய்ததால் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மேம்பாலத்தில் ஒருவாரம் ஆய்வு செய்த பின்னர் தேவையான மாற்றங்கள் அனைத்தும் செய்யப்படும் என்றார்.
இதனால், ஜிடி நாயுடு பாலத்தில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பாதுகாப்பு காரணத்திற்காக 1 வாரகாலம் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரியவருகிறது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications