ஒரு சிலரின் ஆணவம், பதவி வெறியால் அதிமுக படாதபாடுபடுகிறது.. டிடிவி தினகரன் குட்டு!
கோவை: ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் அதிமுக படாதபாடு பட்டுவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இபிஎஸ் கைகள் ஓங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இவர்களின் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்ற சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரையின்114-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று கோவையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.

டிடிவி தினகரன் பேட்டி
இதனைத்தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் இன்று ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும், விரைவில் சரியாகிவிடும் என்று தெரிவித்தார்.

திராவிட மாடல்
தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை துன்பப்படுத்துவது முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். இதற்கு மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தல் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். அதேபோல் இந்தி மொழி பற்றி அமித் ஷாவின் கருத்துக்கு, எந்த மொழியையும் வேறு மாநிலத்திலேயும் திணிப்பது தவறான நடவடிக்கை. தமிழக மக்கள் விரும்பு எதையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மத்தியில் ஆட்சிய் செய்வோர் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று பதில் அளித்தார்.

மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்கள் பாதிப்பில் இருக்கிறார்கள். இதில் மின் கட்டண உயர்வு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை மின் கட்டணத்தை உயர்த்தி தான் ஆக வேண்டும் என்றால், மக்களை பாதிக்காதவாறு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திமுக மீது விமர்சனம்
அதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியால், திமுகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால் வருங்காலத்தில் தகுந்தி தீர்ப்பை மக்கள் திமுகவுக்கு வழங்குவார்கள். அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களது குடும்பத்தைத்தை தான் வளப்படுத்திக் கொள்கிறார்களே, தவிர தமிழகத்துக்கு எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications