Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தர்ம சங்கடத்தில் அண்ணாமலை.. உத்தம ராமசாமி எங்கே? நில அபகரிப்பு வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

கோவை: ரூ.500 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி - கொடிசியா அருகே பிஎஸ்ஜி நிறுவனத்தின் பூர்வீக நிலத்தில் 45.82 ஏக்கர் நிலத்தை நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரிநிலம் என அரசு அறிவித்தது அறிவித்தனர். இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்திருந்தது. இதற்கு எதிராக பிஎஸ்ஜி குழுமத்தின் வாரிசுகள் சிவக்குமார், பாலாஜி மற்றும் க்ரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

BJP Kovai district president Uthama Ramasamy abscond in land encroachment case

இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் நிலத்தை மீட்க உத்தரவிட்டிருந்தது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன்லால், "உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்த நிலம் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

ஆனால், அங்கு சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்து உள்ளனர்." என்றார். இதனை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரையில் பங்கேற்றபோது உத்தம ராமசாமிக்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்து அவர் நடை பயணத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது பாஜகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதை தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியானது. அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அண்ணாமலை கோவை மாவட்ட பயணத்தை முடித்து நீலகிரி சென்றார்.

அப்போது உத்தம ராமசாமி மீது அரசு நில அபகரிப்பு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது அண்ணாமலைக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கோவை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்தும் உத்தம ராமசாமி நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+