தமிழக பாஜகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. வானதி சீனிவாசனுக்கு கொரோனா.. கோவை மருத்துவமனையில் அனுமதி
கோவை: கோவை தெற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், பாஜகவின் மகளிரணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மகளிரணியின் தேசிய தலைவியாக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி வாகை சூடினார்.

தற்போது தமிழக அரசியல் மற்றும் தேசிய அரசியல் என ஒரே நேரத்தில் 2 வகையான அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் இன்று கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு குணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அவதூறு வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் தமிழக பாஜக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தற்போது வானதி சீனிவாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது அந்த கட்சியினருக்கும், வானதி சீனிவாசன் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications