சிங்கத்தின் வாயில் சிக்கிய விஜய்.. பாஜகவின் தேர்தல் டீல்.. புட்டுபுட்டு வைத்த செல்வப்பெருந்தகை
கோவை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை, ஜனநாயகன் படம் நெருக்கடி ஆகியவை மூலம் பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. விஜய்க்கு அரசியல் நெருக்கடி கொடுத்து தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சித்து வருகிறது. அவர் சிங்கத்தின் வாயில் சிக்கிவிட்டார் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தி நாளை மதியம் நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகை புரியவுள்ளார். அங்கு பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் ஆகியவற்றில் ராகுல் பங்கேற்கிறார். முழுக்க முழுக்க பள்ளி நிகழ்விலும், பொங்கல் விழாவிலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்
இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. தவெக தலைவர் விஜய்யை விசாரணை என்கிற பெயரில் அரசியல் நெருக்கடி கொடுத்து தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்களின் அந்த முயற்சி பலிக்காது. விஜய் ஒப்பந்ததிற்கு தாயரானால் வழக்குகள் வாபஸ் வாங்கப்படும். சிங்கம் வாயில் மாட்டிக்கொண்ட கதையாக விஜய் சிக்கி இருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பார்க்க தானே போகிறோம்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேச தெரியாதவர். அவருக்கு எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்று தெரியாது. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ் மண்ணில் பாசிச சக்திகளை நுழைய விடாது. கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். இந்தியா கூட்டணி அங்கம் உள்ள எல்லா ஆட்சியையும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியாக தான் பார்க்கிறோம்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
ஒவ்வொருவருக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். இதில் திமுக தலைமையும், எங்கள் தலைமையும் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு கொள்ளை புற அரசியல் செய்யும் பழக்கம் இல்லை. வெளிப்படையாக தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். கூட்டணி தொடர்பாக எங்கள் தலைமை குழு அமைத்துள்ளது. அவர்கள் தான் பேசுவார்கள். இனிமேல் கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் பேச மாட்டார்கள்" என்றார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல்












Click it and Unblock the Notifications