ஏழைகளுக்கு அடி.. இஎஸ்ஐ தொழிலாளர் பிள்ளைகளுக்கான மருத்துவ கல்வி கோட்டா ரத்து.. கோவை எம்.பி. கண்டனம்
கோவை: இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பலன்பெறும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு, இஎஸ்ஐ மருத்துவமனைகளில், வழங்கப்பட்டு வந்த மருத்துவ படிப்பு கோட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கோவை லோக்சபா உறுப்பினர் பிஆர் நடராஜன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இஎஸ்ஐ மருத்துவமனைகளில் இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பலன் பெறும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 20% கோட்டா வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கடுமையான கண்டனத்துக்குரியது. 1,948 ஆம் ஆண்டைய, தொழிலாளர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் நிதி திரட்டப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனை நடைபெற்று வருகிறது.

இஎஸ்ஐயில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு இங்கு இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வந்தது. கோவை சிங்காநல்லூரில் 32 ஏக்கர் பரப்பளவில் 520 கோடி ரூபாய் செலவில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணம் இதற்கு பயன்படுத்தப்பட்டது.
100 மருத்துவ சீட்டுகளில் 65 சீட்டுகள் மாநில அரசுகள் ஒதுக்கப்பட்டவை. 15 சீட்டுகள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டவை. மிச்சமுள்ள 20 இருக்கைகள் ஐபி கோட்டா அடிப்படையில் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியவை. ஆனால் இந்த வருடம் இந்த கோட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வை கொண்டுவந்து மாணவர்களின் மருத்துவ கனவை மோடி அரசு நசுக்கி விட்டது. இப்போது நாடு முழுக்க, 35 இஎஸ்ஐ மருத்துவமனைகளில் 300 இருக்கைகளை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கனவை மோடி அரசு கலைத்து விட்டது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் கனவுகளை மத்திய அரசு தொடர்ந்து நசுக்கி வருகிறது. எனவே இஎஸ்ஐ பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உள்ள கோட்டா அடிப்படையிலா சீட்டுகள் நிரப்பப்பட வேண்டும். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்த ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாதம், ரூ.20,000 என்ற அளவுக்கும் குறைவாக சம்பளம் பெறுவோருக்கு இஎஸ்ஐ திட்டத்தின் பலன் உண்டு. இதுபோன்ற குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளும் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் கோட்டா நடைமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications