கோவையில் வழக்கை நடத்தும் வக்கீலுக்கு பணம் கொடுக்க.. திருடன் செய்த வேலை.. ஆடிப்போன ஊட்டி வக்கீல்
கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஹரிகரன் என்பவர் வக்கீலாக இருக்கிறார். இவர் கடந்த 5ம் தேதி கோவைக்கு வந்தார். பேருந்தில் பயணித்த போது, அவரது செல்போன் திருடப்பட்டது. இந்த வழக்கில் கோவை புலியங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வழக்கை நடத்தும் வக்கீலுக்கு பணம் மற்றொரு வக்கீலின் செல்போனை திருடியது தெரியவந்துள்ளது.
பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள திருடன், தனது வக்கீலுக்கு வழக்கை நடத்த பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். பணத்தை புரட்ட வழக்கம் போல் திருட நினைத்த திருடன், அதற்காக இன்னொரு வக்கீலுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார். அப்படி திருடியவர் கடைசியில் அதற்கும் சேர்த்து கம்பி எண்ணி வருகிறார். யார் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 75 வயதாகும் ஹரிகரன் என்ற வக்கீல் இவர் கடந்த ஜனவரி 5-ந் தேதி கோவைக்கு பேருந்தில் வந்துள்ளார். வக்கீல் ஹரிகரன் பேருந்தில் சென்ற போது அவரின் விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டிருக்கிறது இதுகுறித்து ஹரிகரன் கடைவீதி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் வக்கீலிடம் செல்போனை திருடியது கோவை புலியகுளத்தை சேர்ந்த 47 வயதாகும் மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்ததுடன், அவர் திருடிய செல்போனை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சில தகவல்கள் வெளியாகின. அதாவது, மணிகண்டன் தனது 15 வயதிலேயே திருட்டில் ஈடுபட்டு வந்து உள்ளார். அவர் மீது கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 15 வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இதற்காக அவர் ஒரு வக்கீலை நியமித்து வழக்கையும் நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் அண்மையில் ஒரு திருட்டு வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். வழக்கை நடத்தி வரும் வக்கீலுக்கு கொடுக்க மணிகண்டனிடம் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே திருட்டில் ஈடுபட்டு அந்த பணத்தை கொடுக்க முடிவு செய்தார்.
அப்போதுதான் ஊட்டி வக்கீல் ஹரிகரனிடம் தெரியவந்தது. அந்த செல்போனை ஒரு கடையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்க முயன்ற போதுதான் போலீசார் மணிகண்டனை பிடித்தார்கள். இதையடுத்து போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications