பீகார் தேர்தலின் போது மோடி சொன்ன வார்த்தைகள்.. முடிந்தால் தமிழ்நாட்டிலும் பேசுங்க.. ஸ்டாலின் சவால்!
கோவை: பீகார் தேர்தலின் போது தமிழர்கள் பற்றி பேசிய வார்த்தைகளை பிரதமர் மோடி தைரியம் இருந்தால் இங்கு பேசட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். ஒடிசாவில் தமிழர்களை திருடர்களாக பாஜக சித்தரித்து பேசியதாக குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் மீது பாஜகவுக்கு வெறுப்பு அதிகமாக இருப்பதாகவும் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின், நான் அதிக முறை வந்த மாவட்டம் கோவை தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கோவை மக்கள் தந்துள்ளீர்கள். 2026 சட்டசபைத் தேர்தலிலும் அதேபோன்ற வெற்றியை கொடுக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி என்றால் செயல் வீரர் என்று அர்த்தம். நினைத்ததை சாதித்து காட்டுபவர். அதனால் தான் கோவையில் நிற்கிறார். எந்த வேலையை கொடுத்தாலும் எதிர்பார்ப்புக்கு மேல் செய்பவர். அதேபோல் கலவரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று செயல்படும் கட்சிக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி.
அந்த தேர்தலில் 40க்கு 40 வென்றோம். இப்போதும் அடித்து சொல்கிறேன். அவர் வந்தால் திமுகவின் 200 தொகுதி இலக்கு உறுதியாகிவிடும். போதிய மக்கள் தொகை இல்லை எனக் கூறி மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்துவிட்டு, ஆளே இல்லாத கடைசியில் டீ ஆத்துவது போல், ஆக்ரா நகரில் ஆளிக்காமல் மெட்ரோவை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்த போது, தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார். அவர் வகிக்கும் பதவிக்கு இது தகுதியான பேச்சா இது? தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வரப் போகிறீர்கள். பீகாரில் பேசிய வார்த்தைகளை தைரியம் இருந்தால் பிரதமர் மோடி சொல்வாரா? தமிழ்நாட்டில் பல்வேறு இனம், மொழிக், மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்கிறார்கள்.
தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் பேசினார். ஒடிசாவிலும் தமிழர்களை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தினார்கள்.. அதனை மறக்க முடியுமா? நம்மை கேவலப்படுத்தி விளம்பரங்களை வெளியிட்டார்கள். பூரி ஜெகன்நாத் கோவிலின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டது என்று தமிழர்களை திருடர்களாக சித்தரித்து பேசினார்.
தமிழர்கள் கர்நாடகா வந்து வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று பாஜக அமைச்சர் பேசிவிட்டு, எதிர்ப்பு கிளம்பிய பின் மன்னிப்பு கேட்டார். இதன் காரணமாகவே பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதுதான் பாஜகவின் உண்மையான குணம். தமிழ் மீது பாஜகவுக்கு வெறுப்பு ஊறிப்போயிருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
-
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு!












Click it and Unblock the Notifications