கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலையில் ட்விஸ்ட்.. விவாகரத்து கொடுக்காததால் கணவர் வெறிச்செயல்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. கோவையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் என்பவரின் மனைவி கடந்த மாதம் வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவர்களிடம் பணியாற்றிய ஓட்டுநர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதில் திடீர் திருப்பமாக விவாகரத்து கொடுக்காததால் ஓட்டுநர் மூலம் மனைவியை கொலை செய்த வழக்கில் அதிமுக சரவணன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பன்னீர்மடை பகுதி அதிமுக பிரமுகராக இருப்பவர் கவி சரவணன் (வயது 51). இவர் பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்தார். இவருக்கு மகேஸ்வரி (வயது 46) பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தாளியூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 49) கடந்த 15 வருடங்களாக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

பெண் கொலை
கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மகேஷ்வரியை சுரேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், சரவணனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் மனைவி மகேஸ்வரியுடன் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் சரவணன் - மகேஸ்வரி கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் சுரேஷ், கணவன் - மனைவி இருவருக்கும் ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அப்போது மகேஸ்வரி, நீ பணம் வாங்கிக் அவருக்கு சப்போர்ட் பண்ற. நீ நல்லாவே இருக்க மாட்ட. நாசமா போய்டுவ என்று திட்டியதால் ஆத்திரமடைந்து மகேஸ்வரியை கொலை செய்ததாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.
விவாகரத்து பஞ்சாயத்து
காவல்துறையினர் தொடர்ந்து சுரேஷை கஸ்ட்டியில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் திடீர் திருப்பமாக சுரேஷை வைத்து மனைவியை கொலை செய்ய தூண்டியதே சரவணன் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "அதிமுக பிரமுகர் கவி சரவணனுக்கும், அவரின் மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்தன.
சரவணனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால், வீட்டிற்கு வராமல் வேறு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். அங்கு ஏற்கனவே திருமணமான மற்றொரு பெண்ணுடன் அவர் உறவில் இருந்துள்ளார். இதுதொடர்பாக மகேஸ்வரியுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மகேஸ்வரியிடம் அவர் விவாகரத்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மகேஸ்வரி விவாகரத்து கொடுக்க முன் வரவில்லை.
அதிமுக பிரமுகர் கைது
இதனால் சரவணன் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக சுரேஷிடம் பேசி வழக்கு செலவை பார்த்துக் கொள்கிறேன். மேலும் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள செங்கல் சூளையை உனக்கு தருகிறேன். எப்படியாவது என் மனைவியை கொலை செய்துவிடு என்று சரவணன் கூறியுள்ளார். அதனடிப்படையில் தான் சுரேஷ் மகேஸ்வரியை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார்.
சரவணனிடம் நடத்திய விசாரணையில் இதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சுரேஷை தொடர்ந்து சரவணனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்." என்றனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications