கொரோனாவை அழிக்க மாட்டுசாணம், கோமியம் கலந்த நீரை கோவை தெருக்களில் தெளித்த பாரத மாதா அறக்கட்டளை
கோவை: கொரோனா கிருமிகளை அழிக்க மாட்டு சாணம், கோமியம் கலந்த நீரை கோவை தெருக்களில் பாரத மாதா அறக்கட்டளையின் தெளித்தனர்.
Recommended Video
கோவையில் கொரோனா தேவி என்ற பெயரில் ஒரு சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே வட இந்திய மாநிலங்களில் மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா குணமாகும் என பாஜகவினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதன் உச்சமாக குஜராத்தில் மாட்டு சாணியை பூசி குளியல் போடும் நிகழ்ச்சியையே நடத்தி ஓய்ந்தனர். இந்த வரிசையில் இப்போது கோவையில் கொரோனா கிருமிகளை அழிக்க மாட்டு சாணம், கோமியம் கலந்து கோவை தெருக்களில் தெளித்திருக்கின்றனர் கோவை பாரத மாதா அறக்கட்டளையினர்.

கோவை உடையார்பாளையத்தில் பாரத மாதா அறக்கட்டளை என்ற பெயரில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது வேப்பிலை, மஞ்சள், மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றை பெரிய டிரம்களில் கலந்து வீதி வீதியாக தெளித்தனர்.

இப்படி வீதி வீதியாக தெளித்தால் கொரோனா கிருமிகள் அழிந்துவிடும் என்றனர் பாரத மாதா அறக்கட்டளையினர். மேலும் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீரையும் பாரத மாதா அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.












Click it and Unblock the Notifications