கோவை பெண் ஆட்டோ ஒட்டுநர் வைராக்கியம்.. நிறைவேறிய கனவு.. குடியரசு தலைவரிடம் அழைப்பு
கோவை: கோவை எல்லோருக்கும் சொந்த வீடு கனவு இருக்கும். ஆனால் அதை சாத்தியப்படுத்துவது எளிதான விஷயம் இல்லை. கடின உழைப்பும், விடாமுயற்சியும் மிகவும் அவசியம். அதனுடன் அரசு உதவியும் கிடைப்பதால் பலரின் சொந்த வீடு கனவு நனவாகி வருகிறது. அந்த வகையில் கோவையில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிய சங்கீதா. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். அவரின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவை பார்வையிடுவதற்கும், குடியரசு தலைவர் வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளியாக உள்ளார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு மாதம் ரூ.15,000 வருமானம் பெறுகிறார்கள். இவர்கள் மாதம் ரூ. 4,000 கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 20 வருடங்களுக்கு மேல் வாடகை வீட்டில் இருந்தனர்.

ஆட்டோ ஓட்டுநரின் சொந்த வீடு கனவு
சங்கீதாவின் தாத்தாவுக்கு சொந்தமாக பூர்வீக நிலம் இருக்கிறது. ஆனாலும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார்கள். மகன்கள் இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். தங்களின் சிறிய சேமிப்பை வைத்து சங்கீதா - பாலாஜி தம்பதி சொந்த வீடு கட்டுவதற்கு முயற்சி செய்தார்கள்.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ. 2.10 லட்சம் மானியம் பெற்றனர். மேலும் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் கடன் பெற்று தங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கியிருக்கிறார்கள். தற்போது தங்கள் குடும்பத்தினருடன் கோவையில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.
குடியரசு தின விழாவிற்கு அழைப்பு
கடின உழைப்பு, பொறுமை மற்றும் விடா முயற்சியால் கனவை சாத்தியப்படுத்திய சங்கீதாவுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராடுகள் குவிந்து வருகின்றன. அரசுத்தரப்பில் அவருக்கு ஏற்கனவே உதவிக்கரம் நீட்டப்பட்டது. பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி பயனடைந்த சங்கீதாவை கௌரவிக்கும் வகையில் டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் அலுவலகமான ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பேரணியை நேரில் காண்பதற்கு சங்கீதா மற்றும் அவரின் கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெருமிதம்
"இது சங்கீதாவின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்" என்று தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அவரை பாராட்டியுள்ளனர். இந்த தகவலால் சங்கீதா சந்தோஷமடைந்துள்ளார். இதுகுறித்து சங்கீதா கூறுகையில், "அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தால் என் வாழ்க்கை மாறியுள்ளது. எனக்கு வீடு கட்ட உதவிய மத்திய, மாநில அரசுக்கு மிகவும் நன்றி" என்றார்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications