கோவையில் ரூ.1,621 கோடியில் பிரம்மாண்டம்.. அடையாளமாகும் அவினாசி ரோடு மேம்பாலம்.. எப்போது திறப்பு?
கோவை: கோவை அவினாசி ரோட்டில் பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் சந்திப்பு வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,621 கோடி செலவில் நடைபெற்று வரும் பிரமாண்ட மேம்பால பணிகள் வெகுவிரைவாக முடிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஜிஎஸ்டி சாலை எப்படி முக்கியமானதோ, அதுபோல் கோவையை பொறுத்த வரை அவினாசி சாலை மிக முக்கியமானது... கோவை மக்கள் அவினாசி சாலை வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பயணிப்பார்கள்.

இந்த சாலையை பொறுத்தவரை, ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை நகரத்தில் லட்சுமி மில்ஸ் தொங்கி, பாப்பநாயக்கன் பாளையம், நவ இந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு, வரை கடுமையான வாகன நெருக்கம் உள்ள பகுதியாகும். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
இந்த வாகன நெரிசலை குறைக்க வேண்டி, கோவை அவினாசி ரோட்டில் பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் சந்திப்பு வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.1,621 கோடி செலவில் இந்த மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோவை அவினாசி மேம்பாலம் எப்படி அமைகிறது: கோவை அவினாசி மேம்பாலம் 305 தாங்கு தூண்களுடன், 17.25 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் காரிடர்களுடன் அமைக்கப்பட்ட வருகிறது. 4 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த மேம்பாலத்தில் கோவை அண்ணாசிலை, நவ இந்தியா, ஹோப்கல்லூரி, விமானநிலையம் உள்பட 7 இடங்களில் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் குறித்து அதிகாரிகள் கூறும் போது, அவினாசி மேம்பாலத்தில் தற்போதுவரை 63 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கிறது. இறங்குதளம், ஏறுதளம் அமைப்பது உள்ளிட்ட 37 சதவீத பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இங்கு மேம்பால பணிக்காக 4 இடங்களில் உயரமான லாஞ்சர்கள் அமைக்கப்பட்டு கான்கிரீட் காரிடர்கள் இணைக்கப்படுகிறது. மொத்தம் 304 கான்கிரீட் தள காரிடர்களில் இதுவரை 190 அமைக்கப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள 114 கான்கிரீட் காரிடர்கள் இணைக்கும் பணிகள் நடைபெறும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஹோப் கல்லூரி அருகே ரயில்வே பாலத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாலத்தின் இருபுறமும் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு 500 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தூண் அமைக்கப்பட்டு அதன் மீது கான்கிரீட் தூண்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்னும் 15 இடங்களில் தாங்கு தூண்கள் அமைக்க வேண்டி உள்ளது. அடுத்த 8 மாதங்களில் பணிகளை முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவினாசி ரோடு மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும். மழைநீர் வடிகால் வசதியும் செய்யப்படும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்கள்.
உப்பிலைப்பாளையம் தொடங்கி கோல்டுவின்ஸ் அருகே 10 கிலோமீட்டருக்கு அமைக்கப்படும் இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் அவினாசி சாலையில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். அதேநேரம் கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலத்தை நீடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அப்படி மேம்பாலத்தை நீடிக்க 500 கோடி ரூபாய் செலவாகும் என்றும், அரசு திட்டத்தை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
அவிநாசி தொகுதி: பாஜக சுருக்குவலையில் எடப்பாடி..இப்படி பண்ணிருக்க கூடாது..குமுறும் தனபால் ஆதரவாளர்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications