இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங்
கோவை: கோவையைச் சேர்ந்த வாகன உரிமையாளருக்கு சொந்தமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பெயர் எழுதிய பஸ் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பஸ்ஸில் எழுதிய வாசகங்கள் கர்நாடகா தொடங்கி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையொட்டி வாகனங்களில் வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் எழுதினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவைபோலீஸ் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
கோவையை அடுத்த குரும்பபாளையத்தில் இருக்கும் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் அண்மையில் ஒரு தனியார் சொகுசு பஸ்சில் கர்நாடகாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அந்த பஸ்சில் மாணவர்கள் பாட்டுப் பாடி, நடனம் ஆடி மகிழ்ச்சியாக சென்றுள்ளார்கள். அந்த பஸ் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு அருகே உள்ள பகவான்ஹால் பகுதியில் சென்றபோது திடீரென்று போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார்கள்.

அப்போது கோவைச் சேர்ந்த அந்த பஸ்சின் முன்பகுதியில் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராகிம் பெயர் எழுதப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் டான், அண்டர்வேர்ல்டு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தவிர பல வாசகங்களும் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இடம் பெற்று இருந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து கர்நாடகா போலீசார் அந்த பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து டிரைவர் மற்றும் அந்த பஸ்சின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் போலீசார் அந்த பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அதில் இருந்த மாணவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
- குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி?
- ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்!
- விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!
- என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!
- சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கும் ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல்
இதுகுறித்து கோவை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பஸ்கள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் மட்டுமே எழுதப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களில் எழுதும் வாசகங்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கக்கூடாது. அப்படி எழுதப்பட்டு இருப்பது வாகன சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கோவை மாநகர் மற்றும் புறநகரில் வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" இவ்வாறு கூறினார்கள்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!













Click it and Unblock the Notifications