கோயம்புத்தூர்-க்கு வந்த அமெரிக்க டெக் நிறுவனம்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
தமிழகத்தின் 'தொழில்துறை தலைநகரம்' என அழைக்கப்படும் கோயம்புத்தூர், தற்போது வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் மிக முக்கிய முதலீட்டு மையமாக உருவெடுத்து வருகிறது. சென்னையைத் தாண்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கு (MNCs) கோவை மாநகரம் தற்போது மிகவும் விருப்பமான இடமாக மாறியுள்ளது.
இதற்குச் சான்றாக, கோவையில் தற்போது 41 புதிய ஐடி பூங்காக்களும், சுமார் 18 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான பிரம்மாண்ட வணிக இடங்களும் (Commercial Space) அதிவேகமாக உருவாகி வருகின்றன. இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பங்கு வகிக்க திட்டமிட்டு புதிய அலுவலக கிளையைத் தொடங்க அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனம் கோவையில் கால்பதித்துள்ளது.

கோவையில் அலுவலகம் திறந்த அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான எக்ஸீயோ (Exzeo Group, Inc.), கோயம்புத்தூரில் உள்ள ஃபிளிக்சோ ஸ்பேசஸ் (Fliqzo Spaces) வளாகத்தில் தனது புதிய அதிநவீன அலுவலகத்தைத் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைத் தொடர்ந்து, இந்தியாவில் இந்நிறுவனம் அமைக்கும் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE: XZO) பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், சொத்து மற்றும் விபத்துக் காப்பீட்டுத் துறைக்கான (P&C Insurance Ecosystem) 'இன்சூரன்ஸ்-அஸ்-ஏ-சர்வீஸ்' (IaaS) என்ற பிரத்யேக மென்பொருள் தொழில்நுட்பத் தளத்தை உலகளவில் வழங்கி வருகிறது.
எக்ஸீயோ நிறுவனம்
கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டு காப்பீட்டு நிறுவனமான 'எச்சிஐ குரூப்' (HCI Group, Inc.) இன் தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புப் பிரிவாக இந்த நிறுவனம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 'டைப்டேப் இன்சூரன்ஸ் குரூப்' (TypTap Insurance Group, Inc.) என்ற பெயரில் இயங்கி வந்த இந்நிறுவனம், பின்னர் முறையாக 'எக்ஸீயோ குரூப்' என மறுபெயரிடப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2025 நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தையில் பொதுப் பங்குகளை வெளியிட்டு (IPO) பொது நிறுவனமாக மாறியது.

புளோரிடாவின் தம்பா நகரை கார்ப்பரேட் தலைமையகமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், பரேஷ் படேல் தலைமையில் இயங்கி வருகிறது. இவர் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ (Chairman and CEO) ஆக இருந்து வருகிறார்.
உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும், கடந்த 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (Q1 2026) மட்டும் இந்நிறுவனம் 56 மில்லியன் டாலர் ஒட்டுமொத்த வருவாயை ஈட்டியுள்ளது.
கோயம்புத்தூரில் தற்போது ஒரே நேரத்தில் 41 புதிய ஐடி பூங்காக்கள் மற்றும் 18 மில்லியன் சதுர அடி வணிக இடங்கள் கட்டுமானத்தில் உள்ள சூழலில், எக்ஸீயோ போன்ற உலகத்தரம் வாய்ந்த கடன் இல்லாத அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாகக் கோவையில் தங்களின் செயல்பாடுகளைத் தொடங்குவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய பலத்தை கொடுத்துள்ளது.
-
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications