Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் ரூ. 16 கோடியில் வரப்போகும் சூப்பர் திட்டம்.. உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியோடு மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம் பொதுமக்கள் பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தும் மேம்பாலமாக உள்ளது. இந்த மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் இவ்வழியாக சென்றால் சில மணி நேரங்கள் காத்திருந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், உப்பிலிபாளையம் மேம்பாலம் ரூ. 16 கோடி மதிப்பில் விரிவாகக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. ஐடி நிறுவனங்கள், கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு என பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வசித்து வருகின்றனர். அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Kovai flyover

அதேபோல, ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என முன்னணி நிறுவனங்களும் கோவை மாவட்டத்திலேயே முதலீடுகளைச் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சி சார்பில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் பிரதானப் பிரச்சனையாக இருப்பது அதன் போக்குவரத்து நெரிசல் தானம். இதனால், மாவட்டத்தில் தேவையான பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற.

அந்த வகையில், ஐம்பது ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட பழைய மேம்பாலம் என்று அழைக்கப்படும் கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தை ரூ. 16 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவாக துவங்கவுள்ளது.

கோவை மாவட்டத்தில், உப்பிலிபாளையம் மேம்பாலம் முக்கியப் சந்திப்பாகும். இந்த மேம்பாலம் 50 ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட நிலையில், தற்போது மக்கள் தொகை பெருக்கம், வாகன ஓட்டிகள் அதிகரிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பீக் ஹவர்ஸ்களில் இந்த மேம்பாலத்தில் செல்லும்போது பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, மழை காலங்களில் இந்தமேம்பாலத்தின் கீழ் குளம் போல் நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால், இப்பகுதியில் பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனை காரணமாக மேம்பாலத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இந்த மேம்பாலத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். விரிவாக்கம் செய்வதற்கான நிதியைப் பெறுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி உத்தரவு பெறப்படவுள்ளது. இங்கே தொழில்நுட்ப ஒப்புதல் பெற கடந்த சில மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்தமேம்பாலத்தின் மையப் பகுதியில் 16 மீட்டர் அகலத்திற்கு ரவுண்டானா பெரிதாக்கப்படவுள்ளது. மேம்பாலத்தின் வெளிப்புறப் பகுதியில் போதிய இடவசதி இல்லை. வணிக கட்டுமானங்கள் பெரியளவில் சாலையின் அருகேயே உள்ளதால் பாலத்தை விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் உள்ளது. நிலமட்டத்திற்கு கீழ் உள்ளவாறு மேம்பாலம் கட்டியதால் இந்த மேம்பாலத்தில் நீர்த்தேக்கம் தவிர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், தற்போது உப்பிலிபாளையம் மேம்பாலப் பணியை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு ரூ. 16 கோடியில் திருத்திய மதிப்பீடு பெறும் பணிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+