நம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை!
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கடந்த 3 மாதங்களாக சுற்றி வரும் காட்டு யானை அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானை ஒன்று கடந்த 3 மாதங்களாக சுற்றி வருகிறது. இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய அர்த்தநாரிபாளையம், முணுகைபள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (60).
இவர் கடந்த சனிக்கிழமை இந்த யானை தாக்கியதில் பலியானார். அது போல் நொச்சிபள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ். இவரது மனைவி திருமாத்தாள் (55). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தனர்.

வனத்துறை
அப்போது அங்கு வந்த யானை திருமாத்தாளை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அர்த்தநாரிபாளையம் பகுதியில் சுற்றித் திரியும் அந்த காட்டுயானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி இறந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் ,பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காட்டு யானையை பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள்
இதனிடையே காட்டுயானையை பிடிக்க கலீம், மாரியப்பன் என்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. யானையை மயக்க ஊசி மூலம் பிடிக்க வனத்துறையினரும் கால்நடைகள் மருத்துவக் குழுவும் முயற்சித்து வருகின்றன. யானையை பிடிக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யானைக்கு அரிசி ராஜா
3 மாதங்களாக அட்டகாசம் செய்யும் இந்த காட்டுயானையின் பெயர் அரிசி ராஜாவாம். அதென்ன அரிசி என்ற அடைமொழி என கேட்கிறீர்களா? பொள்ளாச்சியிலிருக்கும் ரேஷன் கடைகளுக்குள் புகுந்தால் அரிசி மூட்டைகளை காலி செய்யாமல் விடமாட்டானாம். அது போல் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை சாப்பிடுவதால் இந்த யானைக்கு அரிசி ராஜா என பெயரிடப்பட்டுள்ளது.

சின்னத்தம்பியே பெட்டர்
4 மாதங்களில் 3 பேரை கொன்றதுடன் ரேஷன் கடை, வீடுகளில் அரிசியை காலி செய்த அரிசி ராஜாவுக்கு, கோவையை அடுத்த கண்ணாடிபுத்தூரில் யாரையும் துன்புறுத்தாமல் மக்கள் கொடுக்கும் உணவுகளை மட்டுமே விரும்பி உண்ட சின்னத்தம்பி "தவுசன்ட் (1000) டைம்ஸ் பெட்டர்தானே!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications