நம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை!
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கடந்த 3 மாதங்களாக சுற்றி வரும் காட்டு யானை அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானை ஒன்று கடந்த 3 மாதங்களாக சுற்றி வருகிறது. இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய அர்த்தநாரிபாளையம், முணுகைபள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (60).
இவர் கடந்த சனிக்கிழமை இந்த யானை தாக்கியதில் பலியானார். அது போல் நொச்சிபள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ். இவரது மனைவி திருமாத்தாள் (55). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தனர்.

வனத்துறை
அப்போது அங்கு வந்த யானை திருமாத்தாளை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அர்த்தநாரிபாளையம் பகுதியில் சுற்றித் திரியும் அந்த காட்டுயானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி இறந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் ,பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காட்டு யானையை பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள்
இதனிடையே காட்டுயானையை பிடிக்க கலீம், மாரியப்பன் என்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. யானையை மயக்க ஊசி மூலம் பிடிக்க வனத்துறையினரும் கால்நடைகள் மருத்துவக் குழுவும் முயற்சித்து வருகின்றன. யானையை பிடிக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யானைக்கு அரிசி ராஜா
3 மாதங்களாக அட்டகாசம் செய்யும் இந்த காட்டுயானையின் பெயர் அரிசி ராஜாவாம். அதென்ன அரிசி என்ற அடைமொழி என கேட்கிறீர்களா? பொள்ளாச்சியிலிருக்கும் ரேஷன் கடைகளுக்குள் புகுந்தால் அரிசி மூட்டைகளை காலி செய்யாமல் விடமாட்டானாம். அது போல் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை சாப்பிடுவதால் இந்த யானைக்கு அரிசி ராஜா என பெயரிடப்பட்டுள்ளது.

சின்னத்தம்பியே பெட்டர்
4 மாதங்களில் 3 பேரை கொன்றதுடன் ரேஷன் கடை, வீடுகளில் அரிசியை காலி செய்த அரிசி ராஜாவுக்கு, கோவையை அடுத்த கண்ணாடிபுத்தூரில் யாரையும் துன்புறுத்தாமல் மக்கள் கொடுக்கும் உணவுகளை மட்டுமே விரும்பி உண்ட சின்னத்தம்பி "தவுசன்ட் (1000) டைம்ஸ் பெட்டர்தானே!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications