இதுதான் சொந்த காசில் சூனியம் வைக்கிறதோ.. பாஜகவில் பதவி ஆசை.. சிறையில் கம்பி எண்ணும் கோவைக்காரர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் பாஜக கட்சியில் பதவி பெற விரும்பிய நபர், அந்த பதவி தனக்கு கிடைக்காத காரணத்தால், தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடியிருக்கிறார்.. இதை விசாரணையில் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை வசித்து வருபவர் விஸ்வநாதன். இவருக்கு பாஜகவில் பொறுப்பு வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

அதற்காக பாஜக நிர்வாகிகள் உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமாரை சந்தித்து உள்ளார். அவர்கள் இருவரிடமும் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு விஸ்வநாதன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Coimbatore man who went to jail for wanting to take office in BJP

ஆனால், உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமார் ஆகிய இருவரும் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஸ்வநாதன் , தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டதோடு, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமார் மீது போலீசில் புகார் தந்திருக்கிறார்.

இது தொடர்பாக இருதரப்பினரையும் நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசின் விசாரணையில், கட்சியின் பதவி பெறும் நோக்கில் இருவர் மீதும் குற்றம் சுமத்தி விஸ்வநாதன் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து விஸ்வநாதனை தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலைமுயற்சி என நாடகம் ஆடிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+