Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை சரண்யாவுக்கு காதல் கணவனுடன் பிரச்சனை - கள்ள காதலன் மூலம் பக்காவாக செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே சதீஷ்குமார் என்பவர் கள்ளக் காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சதீஷ் மனைவின் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், எஸ்.குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சரண்யா என்பவரை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்க 9 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பாட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சரண்யா பிரிந்து சென்று தன்னுடைய தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

coimbatore-murder-coimbatore-man-murdered-over-illegal-affair

கணவன் - மனைவி பிரச்சனை

சதீஷ்குமார் அவ்வபோது அங்கு சென்று தன்னுடைய குழந்தைகளை பார்த்துவிட்டு வருவார். இதனிடையே சரண்யாவிற்கும் அவரது உறவினரான முருகன் என்பவருக்கும் கள்ள காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது தொடர்பு குறித்து சமீபத்தில் சதீஷ்குமாருக்கு தெரிந்துள்ளது. இதனால் குடும்பத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் தேதி, மதியம் செஞ்சேரிமலை டாஸ்மாக் கடைக்கு முருகன் சென்றுள்ளார்.[Coimbatore Murder]

அவருடன் அவரின் நண்பர்கள் கோபிநாத், சிவலிங்கம், 17 வயது சிறுவன் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். பிறகு சதீஷ்குமார் தன்னுடைய குழந்தைகளைப் பார்ப்பதற்காக குமாரபாளையம் சென்றுள்ளார். இதுகுறித்து சரண்யா முருகனுக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். சதீஷ்குமார் அங்கிருந்து புறப்பட்டபோது அதே ஊரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பயணித்துள்ளார்.

கடத்தி சென்று கொலை

திடீரென அந்த வழியாக காரில் வந்த முருகன் உள்ளிட்ட 4 பேர், சதீஷ்குாரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். காரில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்து, சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அங்கு வாய்க்கால் கரையில் அமர்ந்து மீண்டும் மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து சதீஷ்குமாரை பீர் பாட்டிலால் தலையில் கடுமையாக தாக்கி பிஏபி வாய்க்காலில் தள்ளியுள்ளனர்.

இது தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருப்பூர் மாவட்டம் நாதேகவுண்டன்பாளையம் பிஏபி வாய்க்காலில் நேற்று ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. திருப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டது. அது சதீஷ்குமாரின் உடல் என்பதை அவரின் தந்தை மயில்சாமி உறுதி செய்தார்.

3 பேர் கைது

இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலைக்கு காரணமான முருகன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணம் கடந்த உறவின் காரணமாக கணவனைத் திட்டமிட்டு கடத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+