பிரதமர் அலுவலகத்தில் இருந்து பறந்த உத்தரவு.. கோவை மேம்பாலத்தில் வரப்போகும் அதிரடி மாற்றம்
கோவை: கோவையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால் போக்குவரத்து சரியானதோ, இல்லையோ சர்ச்சைகளும், புகார்களும் அதிகம் வெடித்து கொண்டிருக்கின்றன. பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் முறையாக கட்டப்படாததால் ஏராளமான ஊழல் புகார்கள் முன் வைக்கப்பட்டன. இதை சரி செய்ய தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு ஆபத்து நிறைந்த பகுதியில் பிரச்சனையை சரி செய்யும் விதமாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.8 கி.மீ தொலைவுக்கு, ரூ.115 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. மிகவும் மந்தமாக பணிகள் நடைபெற்றன. ஒருவழியாக கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்
மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து ஏராளமான புகார்கள் எழுந்தன. மேம்பாலத்தின் மேல் மேடு பள்ளமான சாலை, குளம் போல தேங்கும் தண்ணீர், முறையற்ற திட்டமிடல் ஆகியவற்றால் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடங்கி, ஜோதிபுரம் பகுதியில் பாலம் இறங்கும் இடத்தில் பாலத்தை ஒட்டியே ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு கட்டிடம் உள்ளது. அதை அகற்றாமல் பாலம் கட்டியதால் அப்பகுதி மிகவும் குறுகலாக உள்ளது.
பாலத்தின் பக்கவாட்டிலுள்ள சர்வீஸ் சாலையும், பாலம் இறங்கும் இடமும் ஒரே இடத்தில் இணைகிறது. இது விபத்து அபாயம் கொண்டது. மேலும் பாலத்தில் மழைநீர் செல்ல எந்த வழியும் இல்லை. சிறிய மழை பெய்தாலே மேம்பாலத்தின் மேல் பகுதியில் குளம்போல தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக மேம்பாலத்தில் விளக்குகள்கூட அமைக்கவில்லை.
பாலத்தில் ஊழலா
இந்த மேம்பாலத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் புகார் எழுந்தது. பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் இந்திய சாலை காங்கிரஸ் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் வரை புகார் சென்றது. பிரதமரே திறந்து வைத்த மேம்பாலத்தின் நிலை இப்படியாக என்று அதிர்ச்சி எழுந்தது. இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்தன.
இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் தொடர்பாக ஒரு ஐஎஸ்ஏ அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் சாலைகள் திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன் என்கிற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இந்த பிரச்சனையை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் பணி
அதனடிப்படையில் பாஸ்கர பாண்டியன் விசாரணை நடத்தியுள்ளார். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அங்கு விபத்தை ஏற்படுத்டுதும் அபாயம் உள்ள பகுதியை சரி செய்ய ரூ.7.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 7.5 சென்ட் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த ரூ.1.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கு 400 மீ தொலைவு சர்வீஸ் சாலை அமைக்கப்படவுள்ளது.
முதலில் நாங்கள் அதை ஆக்கிரமிப்பு கட்டிடம் என்று நினைத்தோம். பிறகு தான் அது பட்டா நிலம் என்று தெரிந்தது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் இதர பணிகளை நிறைவு செய்ய திட்டமிடுள்ளோம்." என்றனர். இதன்மூலம் பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications