கோவை மக்களுக்கு செம நியூஸ்! சத்தியமங்கலம் வரை வருது புதிய 4 வழிச்சாலை! சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்
கோவை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் இருந்து சத்தியமங்கலம் வரையில் புதிதாக 4 வழிச்சாலை அமைக்கக் கடந்த அதிமுக ஆட்சியிலேயே திட்டமிடப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே சுமார் 5 ஆண்டுகள் கழித்து அத்திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு முதலீடுகள் பெறப்படுகின்றன.

உள்கட்டமைப்பு: மற்றொரு பக்கம் தொழில்துறையினருக்குத் தேவையான உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பல முக்கியமான சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து சரக்குகளை வேகமாகவும் குறைந்த செலவிலும் மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். அப்படி தான் கோவை சத்தி வரையிலான நான்கு வழிச் சாலைத் திட்டமிடப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னைக்கு அடுத்து முக்கியமான நகரமாகக் கோவை இருக்கிறது. ஐடி துறை மட்டுமின்றி தொழில்துறையினருக்கும் முக்கியமான ஒரு இடமாகக் கோவை இருக்கிறது. இதனால் கோவையில் இருந்து பிற இடங்களுக்குச் சரக்குகளை எளிதாகக் கொண்டு செல்ல சாலை திட்டங்கள் தேவைப்படுகிறது. இதற்காகத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
4 வழிச்சாலை: அதன்படி கோவையில் இருந்து சத்தியமங்கலத்தை, குறிப்பாகத் தமிழ்நாடு- கர்நாடக எல்லை வரையிலான பகுதியை இணைக்கும் வகையில் க்ரீன் ஃபீல்ட் 4 வழிச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே இப்போது மீண்டும் அந்த திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பிரிவை மாநில அரசு அமைக்க வேண்டியிருந்ததால், திட்டம் தொடங்கப்படவில்லை. இந்தச் சூழலில் நிலம் கையகப்படுத்தும் பிரிவு அமைக்கத் தமிழக அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் அதற்கான அதிகாரிகளை நியமிப்பார். ஒரு மாதத்தில் இந்த பணிகள் எல்லாம் நிறைவடையும். அதன் பிறகு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும்" என்றார்.
திட்டம் என்ன: கோவையில் இருந்து சத்தியமங்கலம் வரையிலான 96 கி.மீ.க்கு புதிய சாலை அமைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கோவையில் இருந்து சத்தியமங்கலம் மலை அடிவாரம் வரை இது நான்கு வழிச்சாலையாக இருக்கும். அங்கிருந்து கக்கனல்லா எல்லை வரை இரண்டு வழிச்சாலையாகவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் 4,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலத்தைக் கையகப்படுத்த மத்திய அரசு ₹640 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் போது சாலை திட்டத்திற்கான மதிப்பீடு தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.
அடுத்து என்ன நடக்கும்: அதிகாரிகள் மேலும் கூறுகையில், "இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது.. அப்போதே நிலம் கையகப்படுத்துதல் குறித்த அறிவிப்பும் கூட வெளியிடப்பட்டது. இருப்பினும் அந்த நேரத்தில் இந்த சாலை திட்டம் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகே திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்போது நிலம் கையகப்படுத்துவது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பும் காலாவதியானது. இதன் காரணமாகவே இப்போது மீண்டும் அனைத்து செயல்முறைகளையும் தொடங்க வேண்டி இருக்கிறது" என்றார்.
விவசாயிகள் எதிர்ப்பு: அதேநேரம் கோவை அடுத்துள்ள அன்னூர் பகுதி விவசாயிகள், இத்திட்டத்திற்காக தங்களது நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கோவை- சத்தியமங்கலம் இடையே இருக்கும் சாலையை அகலப்படுத்தலாம் என்றும் புதிய சாலை தேவையில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications