கதற கதற காரில் கடத்தப்பட்ட இளம்பெண்.. பரவும் பகீர் சிசிடிவி காட்சி - கமிஷனர் விளக்கம்
கோவை: கோவை மாவட்டம், இருகூர் அருகே இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி காரில் கடத்திச் சென்றதாக பரவி வரும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரில் பார்த்தவர்கள் சிங்காநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், இருகூரை அடுத்த ஏஜி புதூர் அருகே தீபம் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் அப்பெண்ணை தாக்கி காரில் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில், கார் ஒரு சில நிமிடங்கள் நின்றதாகவும், அப்போது காருக்குள் இருந்த பெண் அலறிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரின் அருகில் செல்ல முற்பட்டபோது கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
காரில் இருந்த மூன்று பேர் பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இளம்பெண்ணை கடத்திச் சென்ற கார் ஹூண்டாய் i20 கார் என்பதும், ஏஜி புதூர் பகுதியில் இருந்து இருகூர் நோக்கி கார் சென்றதும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் காவல் துறையினர் கைப்பற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வெள்ளை நிற காரில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அங்கிருந்து கிளம்பியது போல காட்சிகள் இருந்தன. பெண்ணின் அலறல் சப்தமும் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண் கடத்தப்பட்டாரா அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாக வலுக்கட்டாயமாக உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், இருகூர் அருகே வெள்ளை நிற காரில் பெண் ஒருவர் அலறல் சப்தத்துடன் சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல் துறையினருக்கு 100க்கு அழைத்து தகவல் அளித்துள்ளார்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள். அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம். சூலூரில் இருந்து வந்த ஒரு வாகனம் இருகூர் வழியாக சென்றுள்ளது. அப்போது, ஒரு காரில் அலறல் சத்தம் கேட்டதாக மட்டுமே தகவல் கிடைத்துள்ளது.
பெண் காணவில்லை என்பதுபோல இதுவரை புகார் எதுவும் வரவில்லை. வாகனத்தின் பதிவு எண் எந்த ஒரு இடத்திலும் தெளிவாக புலப்படவில்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications