கோவையை கதிகலங்கச் செய்த உ.பி. கொள்ளையர்கள்.. திட்டம் தீட்டிக் கொடுத்த 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகர் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் மூன்று பேரை சுட்டுப் பிடித்திருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கொள்ளையர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கொள்ளை கும்பலுக்கு கோவையில் திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 1,848 வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பில் ஏ பிளாக்கில் 3 வீடுகள், சிா பிளாக்கில் 10 வீடுகள் என 13 வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் 42 சவரன் நகை மற்றும் 1.5 இலட்சம் ரூபாய் பணம், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

coimbatore-robbery-two-people-from-uttar-pradesh-arrested-for-helping-a-robbery-gang

சிசிடிவி ஆய்வு

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கவுண்டம்பாளையம் போலீஸார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் ஆட்டோ மூலம் வந்து கொள்ளை அடித்து விட்டு அதே ஆட்டோவில் திரும்பச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஃப் 48, இர்ஃபான் 45, கல்லூ ஆரிஃப் 60 ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது, காவல் துறையினரை தாக்கிவிட்டு அம்மூவரும் தப்ப முயன்றதையடுத்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

மேலும் இருவர் கைது

இதில், காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிஃப் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கொள்ளையர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் அயூப்கானை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த கொள்ளை கும்பலுக்கு கோவையில் திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த தாவூத் (18) , பர்மான் (23) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே, கொள்ளையர்கள் அரசு அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+