ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த இளம் பெண்.. போக்சோவில் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: வளர் இளம் பருவ காதலும், அதனை தொடர்ந்து நடந்த கல்யாணமும், இளம் பெண்ணுக்கு சிறை தண்டனையை கொடுத்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டின்ஏஜ் காதல்கள் திருமணத்தில் முடிந்தால் சிக்கலில் தான் முடிகிறது. அவசரப்பட்டு ஆசைக்காதலன், காதலியோடு ஓடிபோய் திருமணம் செய்து கொண்டு சிக்கலை சந்திப்பவர்கள் ஏராளம்.குடி பழக்கம், விட்டுக்கொடுத்துபோகாத குணம், பொருளாதார ஸ்திரமின்மை, முடிவெடுப்பதில் பக்குவமின்மை போன்ற பிரச்சனைகளால் வாழ்க்கையே அழிந்து போனவர்கள் ஏராளம்,

டீன்ஏஜ் காதலர்கள் வயதை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்டு கடைசியில் போக்சோ குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. அப்படி சம்பவம் ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு பொள்ளாச்சியில் நடந்துள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

எந்த கிராமம், எந்த தெரு, யார் என்ற விவரம் எல்லாம் தெரிவிக்க கூடாது என்பதால் கற்பனையான பெயர்கள் வைத்துள்ளோம். என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம். பொள்ளாச்சி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் 19 வயது இளம்பெண் லாவண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேலை செய்து வருகிறார். அந்த பங்கிற்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயது சிறுவன் கணேசனுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

காவல் நிலையம்

காவல் நிலையம்

அடிக்கடி பெட்ரோல் போட வரும்போது சிரிக்க வைக்கும் வகையில் சிறுவன் கணேசன் பேசியதை கண்டு மயங்கி லாவண்யா நட்புடன் பழக தொடங்கி உள்ளார். நாளைடைவில் காதலாக மாறி இருக்கிறது. இந்த காதல் விவகாரம் சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்ததால் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணம்

திருமணம்

இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு சிறுவன் கணேசனுக்கு ஹிரன்யா அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது கணேசனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற லாவண்யா, கணேசனிடம் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

பெற்றோரிடம் தகவல்

பெற்றோரிடம் தகவல்

அதன்பின்னர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய கல்யாணம் செய்திருக்கிறார். இதனிடையே திருமணம் முடிந்த பின்னர் வீட்டிற்கு வந்த சிறுவன் கணேசனிடம் பெற்றோர் விசாரித்த பொழுது, லாவண்யாவும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கூறி உள்ளார்.

பெண் குறித்து தகவல்

பெண் குறித்து தகவல்

அதிர்ச்சி அடைந்த கணேசனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி லாவண்யா (19) திருமணம் செய்தது தெரியவந்தது.

சிறையில் இளம் பெண்

சிறையில் இளம் பெண்

இதனையடுத்து லாவண்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள். வளர் இளம் பருவ காதலால் 19 வயதுசிறுமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 17 வயது சிறுவனை திருமணம் செய்த காரணத்திற்காக போக்சோவில் இளம் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+