கோயம்புத்தூரில் அதிகரிக்கும் கொரோனா... 1,561 பேருக்கு சிகிச்சை!!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6,961 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரைக்கும் 3.03 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2.45 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளனர். 5,041 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 5914 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது.

சென்னையில் நேற்று மட்டும் 976 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா தொற்றுபரவல் சற்று குறைந்து வருகிறது. 1,10,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மட்டும் 67,153 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32,92,958 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்து கோயம்புத்தூரில் நேற்று மட்டும் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுளள்து. கோயம்புத்தூரின் பல்வேறு மருத்துவமனைகளில் 1,561 பேர் சிகிச்சசை பெற்று வருகின்றனர். இதுவரை இங்கு 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு இதுவரை 1,101 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 394 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
சேலத்தில் இதுவரை 4,744 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 127 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 1,123 பேர் இன்னும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 56 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 48 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 1,197 பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டுள்ளது. 359 சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 3,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்து இருந்தார். இதுவரை தமிழகத்துக்கு மத்திய அரசு 512.64 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும் தேசிய பேரிடர் நிதியாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications