கோவையில் ஹவுஸ் அரெஸ்ட்டில் போன தம்பதி.. கழிவறைக்கும் போக முடியல! அதிர்ஷ்டவசமாக தப்பித்த ரூ.18 லட்சம்
கோவை: சமீப காலமாக நவீன மோசடிகள் பெருகி விட்டன.. இந்த மோசடிகளில் அப்பாவிகள் மாட்டிக் கொள்கிறார்கள். தங்களை சிபிஐ அதிகாரிகள் என்றும், கைது செய்ய போவதாக மிரட்டியும் அப்பாவகளை பணிய வைத்து, மிரட்டியே பணத்தை லட்சக்கணக்கில் பறித்து விடுகிறார்கள்.. இந்த மோசடிக்குதான் "டிஜிட்டல் அரெஸ்ட்" என்பார்கள். இப்போது கோவையில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்து, ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
கோவை ராமநாதபுரத்தில் 65 வயது நபர், தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்... சமீபத்தில் இந்த நபரை, செல்போனில் யாரோ அழைத்து பேசியிருக்கிறார்கள்.

போனில் பேசியவர், மும்பையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்..
ஆதார் நம்பர்
தொடர்ந்து பேசும்போது, "உங்கள் ஆதார் நம்பரை வைத்து வங்கி கணக்கை சோதனை செய்தோம், அதில், பயங்கரவாதிகளுக்கு பலமுறை நீங்கள் பணம் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் உங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.. எனவே நாங்கள் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை கணக்கை ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
பிறகு சிறிது நேரத்திலேயே 65 வயது நபரின் வீட்டிற்கு, போனில் பேசியவர் போலீஸ் அதிகாரி யூனிபார்முடன் வீடியோகாலில் வந்துவிட்டார்.
கோவை தம்பதி
தம்பதி இருவரிடம் பேசிய போலீஸ் அதிகாரி, "உங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதால், உங்களையும், உங்கள் மனைவியையும் டிஜிட்டல் கைது செய்துவிட்டோம்.. இருவரும் வெளியே செல்லக்கூடாது.. வீட்டின் வெளியே துப்பாக்கிகளுடன் போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறினால் துப்பாக்கியால் சுட்டு விடுவார்கள்.
உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் உள்ள ரூ.18 லட்சத்தை, நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும்.. அங்கே உங்களது பணம் முழுமையாக சோதனை செய்யப்படும்.. எந்த வில்லங்கமும் இல்லையென்றால், அந்த பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துவிடுவோம்..
பேங்க் அக்கவுண்ட்டில் ரூ.18 லட்சம்
ஆனால், நீங்கள் பணத்தை அந்த வங்கி கணக்குக்கு அனுப்பும் வரை வீடியோ காலில் இருக்க வேண்டும்.. எக்காரணம் கொண்டும் வீடியோ காலை துண்டிக்கக்கூடாது" என்று மிரட்டியுள்ளார்.
இதைக்கேட்டு தம்பதி இருவருமே நடுநடுங்கி போயுள்ளனர்.. உடனே அந்த போலீஸ் அதிகாரி, செல்போனில் வீடியோ கால் செய்து, சில போலீஸ் அதிகாரிகளை தம்பதியினரிடம் பேச வைத்தார்..
அந்த நபர்களும், வங்கி கணக்கு ஒன்றை தந்து, உடனே 18 லட்சத்தையும் அனுப்பி வைக்குமாறு மிரட்டி கொண்டேயிருந்துள்ளனர்.. வயதான தம்பதி இருவருமே அறையை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர்.. பாத்ரூமுக்கு போக வேண்டும் என்று சொல்லியும்கூட அவர்களை போலீஸ் அதிகாரி விடவில்லையாம்.
விடிய விடிய தூங்கவில்லை
இப்படி இரவெல்லாம் விடிய விடிய தூங்காமலும், வெளியே வர முடியாமலும் தம்பதி இருவரும் அறைக்குள்ளேயே தவித்து கொண்டிருந்தனர்.. ஆனால், தங்களது 18 லட்சம் பணத்தை மட்டும், அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பவில்லை..
இதனிடையே தம்பதி இருவரும் 2 நாட்களாகவே வெளியே வராமல் உள்ளதால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது.. கதவையும் திறக்காததால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த ராமநாதபுரம் போலீசார், கதவை தட்டி போலீசார் வந்திருப்பதாக சொன்னார்கள்,.
தம்பதிக்கு உயிர் வந்தது
அப்போது தம்பதி இருவரும், மும்பை போலீசார் தங்களை டிஜிட்டல் கைது செய்துவிட்டார்களாம், வெளியே வந்தால் சுட்டு விடுவதாக சொன்னார்கள், அதனால்தான் வரவில்லை என்று அச்சத்துடன் கூறினார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அப்படி யாரும் டிஜிட்டல் கைது செய்ய முடியாது. வெளியே துப்பாக்கியுடன் போலீசார் யாரும் இல்லை என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தி, தம்பதி இருவரையும் வெளியே அழைத்து வந்தனர்.. அங்கு யாருமே இல்லை என்றதும்தான் தம்பதிக்கு உயிரே வந்தது.
டிஜிட்டல் கைது
தம்பதியினரை டிஜிட்டல் கைது என்ற பெயரில் மிரட்டப்பட்டதாக தகவல் கிடைத்ததுமே சைபர் கிரைம் போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பிறகு தம்பதியினரிடம், டிஜிட்டல் கைது என்று எதுவும் இல்லை.. இதெல்லாம் பணம் பறிப்பதற்கான மோசடி கும்பலின் வேலை என்று சமாதானம் செய்தனர்.. அதற்கு பிறகே தம்பதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால், 2 நாட்களாக தூங்காமல் விடிய விடிய பயத்தில் இருந்தாலும், பணத்தை மட்டும் அனுப்பாமல் இருந்ததால், 18 லட்சமும் தப்பியிருக்கிறது...!!!
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications