காற்றும் குறைந்தது காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மக்கள் அவதி
கோவை: காற்றின் வேகம் குறைந்துள்ளதை அடுத்து கோவை மண்டலத்தில் காற்றாலை மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகியவற்றில் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் சுமார் 9,400 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலமாக சராசரியாக தினமும் 10, 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்று வீச்சு அதிகமாக இருக்கும் என்பதால் மின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். அப்போது காற்றாலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, பின் பிரித்து வழங்கப்படும்.
காற்றாலை மூலம் அதிகளவு மின் உற்பத்தி இருக்கும்போது மின்வெட்டு பிரச்னையும் இருக்காது. ஆனால் தற்போது காற்றின் வேகம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. அடிக்கடி பூஜ்ஜியம் என்ற நிலைக்கு காற்றாலை மின் உற்பத்தி செல்கிறது. இதனால் தொழில் நகரமான கோவை மண்டலத்தில் மின்வெட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு மின்வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன, எனவே இங்கு தின மின் தேவை 2,400 மெகாவாட்டாக உள்ளது. இதில் காற்றாலை மூலம் மட்டுமே 1,250 மெகாவாட் பெறப்படுகிறது.
தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால், மின்உற்பத்தி அடியோடு குறைந்துள்ளது. இதனால் கோவையின் பல பகுதிகளில் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது, இதனால், சிறு,குறு தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக வர்த்தக நிறுவனங்கள் கூறியுள்ளன.
கோடை காலத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். அடுத்த மாதம் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் அப்படி அதிகரிக்கும்பட்சத்தில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications