சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் கடத்தியதே நாங்கதான்.. போலீஸிடம் "வாக்குமூலம்" அளித்த 2 பேர்!
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் குடிபோதையில் தகராறு செய்த நபர்கள் திடீரென சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கதான் என போதை ஆசாமிகள் இருவர் உளறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கருமத்தம்பட்டியைச் சேர்ந்த இருவர் மதுபோதையில் சாலையில் செல்வோர், வருவோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீஸார் வந்தனர்.
விசாரணையில் போலீஸாருக்கு உரிய பதிலை அளிக்கவில்லை. மேலும் அவர்களிடம் இருவரும் வாக்குவாதம் செய்தனர்.

ஒருவரை ஒருவர்
பின்னர் அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக் கொண்டு தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீஸார் இருவரையும் மிரட்டினர். உடனே அவர்கள் நாங்கள் என்ன தப்பு செய்தோம். எதுக்கு எங்களை பிடிச்சி வச்சிருக்கீங்க என கேட்டனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பன்
மேலும் சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கள்தான் என கூறி போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்தனர். இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு போதை தெளிய வைக்கும் சிகிச்சை செய்யப்பட்டது.

இரு மாதங்கள்
கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடந்த இரு மாதங்கள் கழித்து நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கடை திறந்தவுடன் இருவரும் புல்லாக மது குடித்துவிட்டு போதையில் கண்டபடி உளறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன் என பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இது போல் போதை ஆசாமிகளால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. அளவுக்கு மிஞ்சி குடித்து போவோர் வருவோரிடம் வம்பிழுக்கும் குடிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications