பீஸ் பீஸா நொறுங்கிய டியூப்லைட்.. 2வது கணவன் + 2 மாத குழந்தையை விட்டு.. டிக்டாக் பிரபலம் ஒரே ஓட்டம்
2 மாத குழந்தையை தவிக்கவிட்டு மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்
கோவை: 2 மாத பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு, ஓடிப்போன மனைவியை தேடிக்கொண்டிருக்கிறார் காதல் கணவர்..!
கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கலையரசன்.. 22 வயதாகிறது.. இவர் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் கற்றுகொடுக்கும் மையம் நடத்தி வருகிறார்.
இவருக்கு பிரகலட்சுமி என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் கிடைத்தது.. பிரகலட்சுமிக்கம் 22 வயது.. சென்னையை சேர்ந்தவர்.. டிக்டாக் வீடியோ மூலம் நிறைய ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.
இவர்களின் நட்பு காதலாக கனிந்தது.. 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.. ஒரு பெண் குழந்தை உள்ளது... இப்போது, 2 மாதங்களுக்கு முன்பு இன்னொரு பெண் குழந்தை கிரகலட்சுமிக்கு பிறந்துள்ளது..

குடைச்சல்
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தம்பதிக்குள் நிறைய தகராறுகள் வந்துபோயுள்ளன.. ஒவ்வொரு முறையும் இவர்களுக்குள் சண்டை வந்தாலும், பிறகு இருவருமே சமாதானம் ஆகி கொள்வார்களாம்.. அப்படித்தான், சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. சண்டை போட்டுவிட்டு, கோபத்தில் கலையரசன் வெளியே சென்றுவிட்டார்.. சிறிது நேரம் கழித்து கலையரசனுக்கு போனை போட்ட பிரகலட்சுமி, வீட்டை விட்டே போவதாக சொல்லிவிட்டு, போனையும் கட் செய்துவிட்டார்..

டிக்டாக்
இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசன் உடனே பிரகலட்சுமியை தொடர்பு கொண்டபோது, அவரது போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு எங்கெங்கோ மனைவியை தேடி அலைந்தார்.. எங்குமே அவர் கிடைக்கவில்லை.. அதனால் நொந்துபோன கலையரசன், மாயமான மனைவியை கண்டுபிடித்து தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார்... புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, மாயமான டிக்டாக் பிரகலட்சுமியை தேடி வருகிறார்கள்... ஆனால், பிரகலட்சுமிக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்..ஒரு பெண் குழந்தையும் அவருக்கு இருந்துள்ளது..

டியூப்லைட்
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதெல்லாம் தெரிந்துதான், கலையரசனும் அவரை விரும்பி திருமணம் செய்துள்ளார்.. மீண்டும் கர்ப்பமாகி உள்ளார்.. இவர் 10 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, பெண்ணுரிமைக்காக பகீரத முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.. அதன்படி, 10 டியூப்லைட்களை காலேயே நொறுக்கிகாட்டி வீடியோவும் வெளியிட்டிருந்தார்.. அதாவது தரையில் வரிசையாக 10 டியூப்லைட்டுகளை வைத்துவிட்டு, கையில் மேளம் அடித்துக் கொண்டே, அந்த லைட்டுகளை காலில் நொறுக்கி காட்டினார் பிரகலட்சுமி.

மாயமோ மாயம்
இந்த வீடியோ அப்போது இணையத்தில் வைரலாக பரவியது.. இப்போது பிரகலட்சுமிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. உண்மையிலேயே மாயமாகிவிட்டாரா? அல்லது எங்கே போயிருப்பார்? என்று தேடி வலைவீசி கொண்டிருக்கிறார்கள்.. அந்த 2வது குழந்தைக்கு 2 மாதம்தான் ஆகிறது.. உடம்பு சரியில்லையாம்.. தாயின்றி தவித்து, அழுது கொண்டே இருந்துள்ளது.. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்களாம்..!
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications