கோவையில் பர்தா அணிந்து வீடியோ எடுத்து சேட்டை.. சிக்கலில் யூடியூபர்
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பர்தா அணிவித்து வீடியோ எடுத்த யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பர்தா அணிந்து வீடியோ எடுத்ததற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். என்ன நடந்தது.. அவர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைக்கு யூடியூபர்கள் பலரும் பல விதமான முயற்சிகளில் இறங்கி வியூஸ் பார்க்க முயற்சிக்கிறார்கள் . மக்களிடம் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெரிதும் வரவேற்பு இருக்கிறது. கோமாளித்தனம் செய்வது, நல்ல அறிவுபூர்வமான தகவல்களை பகிர்வது, கேலி செய்வது, வித்தியாசமான கேள்விகளை கேட்டு மக்களை குழப்புவது, மக்களை கோபப்பட வைக்கும் வகையில் கேள்வி கேட்பது, போன்ற பல்வேறு விஷயங்கள் மூலம் சில யூடியூபர்கள் வியூஸ் பார்க்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். யூடியூபை பொறுத்தவரை அதிகம் யூஸ் கிடைத்தால் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்பதால், வியூஸ் அடிப்படையில் பலரும் மக்களை திசை திருப்பும் வகையில் வீடியோக்கள் மற்றும் செய்திகளை சிலர் வெளியிட்டு வருகிறார்கள்.

அப்படித்தான் கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதைப்பற்றி பார்ப்போம். கோவையை சேர்ந்த 22 வயதான அனாஸ் அகமது யூடியூபர் ஆவார் . இவர், கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் சிலருக்கு பர்தா அணிவித்து, உங்களுக்கு பர்தா அணிந்தால் நன்றாக இருக்கிறது, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து உள்ளார். அத்துடன் அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரையை போல் பலரும் வாக்கிங் செய்தும் பகுதியாகும். இங்கு இரவு பகல் என எல்லா நேரமும் பலரும் நடைபயிற்சி செய்வார்கள். அங்கு பெண்களிடம் பர்தா அணிவித்து யூடியூப் செய்த வேலை பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கோவையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனாஸ் அகமதுவை கைது செய்தனர். நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் இடையூறு செய்து இதுபோன்று வீடியோ எடுக்கக்கூடாது என்றும், அதையும் மீறி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக வலைதள பதிவாளர்களுக்கு கோவை போலீசார் எச்சரித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications