குடையுடன் வந்த மேகம்.. இதமான காற்றோடு பெய்த சாரல்.. குளுகுளுவென மாறியது கோவை
கோவை: கேரளாவில் பெய்து வரும் தெற்மேற்கு பருவ மழை அப்படியே, எப்படி வரலாம் என காற்றென்ற குடையுடன் எட்டி பார்த்து சென்றதால், குளுகுளுவென மாறியது கோவை மாநகரம்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கியமான நகரம் கோவை. பக்கத்தில் ஊட்டி இருப்பதாலும், மரங்கள் நிறைந்த ஊர் என்பதாலும் எப்போதுமே கோவை குளுகுளுவென இருந்தது ஒரு காலத்தில்...

ஆனால் நகரமயத்தால் மரங்களை வெட்டி நரகமயமாகிய கோவையில், மற்ற ஊர்களுக்கு கொஞ்சம் குறையில்லாமல் கொளுத்த ஆரம்பித்தது. இப்போதும் வெயில் அப்படித்தான் கொளுத்துகிறது.
எனினும் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான மேகங்கள், மெல்லிய காற்றோடு கேரளாவின் அனைத்த பகுதிகளையும் குளிர வைத்து வருகின்றன. அப்படித்தான் இன்று பாலக்காட்டையும் தாண்டி. காற்று என்ற குடையுடன் கோவைக்கு ஓடி வந்தன மேகங்கள். அவை மெல்லியதாய் சாரலை வீசிச் சென்றன.
இதனால் கோவை நகரின் பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. புறநகர் பகுதிகளில் லேசான தூறல் மழையும் பெய்தது. வெயில் இல்லாமல். வெப்பம் குறைந்து குளு, குளு காலநிலை கோவையில் காணப்படுகிறது. இன்று மாலை கோவையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில் கோவையில் மட்டுமல்லாமல், கன்னியாக்குமரி மாவட்டத்திலும் இன்று நல்ல மழை பெய்தது. இதனால் அங்கும் இதமான சூழல் நிலவுகிறது
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications