குடையுடன் வந்த மேகம்.. இதமான காற்றோடு பெய்த சாரல்.. குளுகுளுவென மாறியது கோவை
கோவை: கேரளாவில் பெய்து வரும் தெற்மேற்கு பருவ மழை அப்படியே, எப்படி வரலாம் என காற்றென்ற குடையுடன் எட்டி பார்த்து சென்றதால், குளுகுளுவென மாறியது கோவை மாநகரம்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கியமான நகரம் கோவை. பக்கத்தில் ஊட்டி இருப்பதாலும், மரங்கள் நிறைந்த ஊர் என்பதாலும் எப்போதுமே கோவை குளுகுளுவென இருந்தது ஒரு காலத்தில்...

ஆனால் நகரமயத்தால் மரங்களை வெட்டி நரகமயமாகிய கோவையில், மற்ற ஊர்களுக்கு கொஞ்சம் குறையில்லாமல் கொளுத்த ஆரம்பித்தது. இப்போதும் வெயில் அப்படித்தான் கொளுத்துகிறது.
எனினும் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான மேகங்கள், மெல்லிய காற்றோடு கேரளாவின் அனைத்த பகுதிகளையும் குளிர வைத்து வருகின்றன. அப்படித்தான் இன்று பாலக்காட்டையும் தாண்டி. காற்று என்ற குடையுடன் கோவைக்கு ஓடி வந்தன மேகங்கள். அவை மெல்லியதாய் சாரலை வீசிச் சென்றன.
இதனால் கோவை நகரின் பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. புறநகர் பகுதிகளில் லேசான தூறல் மழையும் பெய்தது. வெயில் இல்லாமல். வெப்பம் குறைந்து குளு, குளு காலநிலை கோவையில் காணப்படுகிறது. இன்று மாலை கோவையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில் கோவையில் மட்டுமல்லாமல், கன்னியாக்குமரி மாவட்டத்திலும் இன்று நல்ல மழை பெய்தது. இதனால் அங்கும் இதமான சூழல் நிலவுகிறது
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications