கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!
கோவை: கோவை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குளிக்க இன்று முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம், கோவை மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலம். போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருவியில் குளித்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் தங்கள் வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோவை குற்றாலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும். வனத்துறையினர் இதை கவனித்து, நீர்வரத்து அதிகமாக இருந்தால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிப்பார்கள். தென்மேற்கு பருவமழை காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழை குறைந்து நீர்வரத்து குறைந்ததால், வனத் துறை மீண்டும் திறக்க அனுமதி அளித்தது. கடந்த ஜூலை 11 முதல் கோவை குற்றாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குளிக்க இன்று (23.07.2025) முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications