அப்படிப்போடு..பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்ட அரசு பஸ்கள் - கோவை ஆட்சியருக்கு பறந்த அதிரடி உத்தரவு
கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சாதி பாகுபாடு பார்த்து அரசுப் பேருந்து 400 மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ளது அண்ணா நகர். இப்பகுதியில் பட்டியல் சாதி மக்கள் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கெம்பனூர் கிராமத்தில் கடைசி பேருந்து நிறுத்தமாக அண்ணா நகர் உள்ளது. கெம்பனூர் நிறுத்தத்துக்கும், அண்ணாநகருக்கும் இடைவெளி சுமார் 400 மீட்டர் தான்.

கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், 64 டி, S15 A/1C, S3 பி, 21, 21 பி ஆகிய 5 பேருந்துகள் காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து அண்ணா நகர் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்தன. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இந்த 5 பேருந்துகளையும் அண்ணா நகர் பகுதிக்கு இயக்கப்படாமல் உயர் சாதியினர் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அண்ணா நகர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, 21 மற்றும் 21B பேருந்துகளைத் தவிர மற்ற 3 பேருந்துகள் அப்பகுதிக்கு இயக்கப்பட்டுள்ளன. ஆனால், அதுவும் காலை முதல் இரவு வரை முழுமையாக இயக்கப்படாமல் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இதனால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அண்ணா நகரில் இருந்து கெம்பனூருக்கு நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டியுள்ளதாக புகார் எழுந்தது.
கடைசி பேருந்து நிறுத்தமான அண்ணாநகரில் இருந்து பேருந்து புறப்படுவதால் பட்டியல் சாதி மக்கள் இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றனர். அவர்கள் அமர்ந்திருக்கும்போது, நாங்கள் எப்படி நின்று கொண்டோ, அல்லது அவர்களுடன் சமமாகவோ அமர்ந்து செல்ல முடியும் என்று கூறி சிலர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், டிஎன்எஸ்டிசி அதிகாரிகள், கெம்பனூரில் இருக்கும் உயர்சாதி பிரிவினரின் பேச்சைக் கேட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டப்ப்டுகிறது.
இதனால், காந்திபுரம் பகுதியில் இருந்து இயக்கப்படும் 21 மற்றும் 21 பி போன்ற பேருந்துகள் கெம்பனூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணா நகருக்கு சாதிய பாகுபாடு பார்த்து இயக்கப்படாமல், 400 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், கோவை மாவட்டம் கெம்பனூர் அருகே சாதிய அடிப்படையில் அரசு போக்குவரத்து கழக பேருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமுதாயத்தினர் வசிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லாமல் 500 மீட்டர் முன்னதாகவே நிறுத்தப்படுவது தொடர்பாக நாளிதழ் செய்தி அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இதுகுறித்து விசாரித்து, சாதி ரீதியான பாகுபாடுகளை உடனடியாக விசாரித்து பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் பேருந்துகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட அறிக்கையினை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்குள் (24.9.25) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்கவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications