கோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை
கோவை: கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அமலி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (38). இவர் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர்.
இதனால் அவர் மனைவி ஷோபா (30), மகன் ரித்திக் மைக்கேல் (7), மகள் ரியா ஏஞ்சலின் (1) மற்றும் தாய் புவனேஸ்வரி (65) ஆகியோருடன் அமலி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்தார்.

போலீஸாருக்கு
நேற்று மாலை அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சிகிச்சை
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதில் தற்கொலை செய்து கொண்ட அந்தோணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகு வலி இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் சரியாகவல்லை.

மதிய உணவில் விஷம்
இதனால் மனம் உளைச்சலில் இருந்த அந்தோணி, மனைவி, குழந்தைகள், தாய் ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மதிய உணவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பரபரப்பு
முதுகுவலியால்தான் குடும்பத்தினரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக அந்தோணி எழுதிய தற்கொலை கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications