Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை முதியவர் செய்த காரியம்.. நொடியில் பறிபோன ரூ.16 லட்சம்.. மொபைல் ஃபோனை ஹேக் செய்த குஜராத் கும்பல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முதியவரின் மொபைல் ஃபோனை ஹேக் செய்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து 16 லட்சம் ரூபாயை மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த 10 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சைபர் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கார்டு மேலே 16 நம்பர், வங்கியில் இருந்து அழைக்கிறோம், கேஒய்சி அப்டேட் என பல வழிகளில் மோசடி கும்பலினர் வலை விரிக்கின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்குவோர் பல லட்சங்களை இழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

gujarat-gang-hacks-elderly-mans-mobile-phone-and-robs-him-of-rs-16-lakh

இந்தியாவில் கடந்த 6 ஆண்​டு​களில் நடை​பெற்ற பல்​வேறு ஆன்லைன் மோசடிகள் மூலமாக ரூ. 52,976 கோடியை இழந்​துள்ளனர். கடந்​த ஆண்​டில் மட்​டும் ரூ.19,812 கோடியை இந்​தி​யர்​கள் இழந்​தனர். கடந்​த ஆண்​டில் மகா​ராஷ்டிராவில் சைபர் மோசடி புகார்கள் அதி​கள​வில் பதி​வா​யின. அங்கு ரூ.3,203 கோடியை மக்கள் இழந்துள்​ளனர். அடுத்​த​தாக கர்​நாடகா 2,413 கோடி ரூபாயையும், தமிழகத்தில் 1,897 கோடி ரூபாயையும் மக்கள் ஆன்லைன் மோசடிகளால் இழந்துள்ளனர்.

அந்த வகையில், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முதியவரின் மொபைல் ஃபோனை ஹேக் செய்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து 16 லட்ச ரூபாயை மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த 10 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திரசேகர் (71). இவரது செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு RTO அலுவலகத்தின் பெயரில் லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த இணைப்பை திறந்து பார்த்த நிலையில் முதியவரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நாள் முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து 16 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த முதியவர் வங்கிக்குச் சென்று பார்த்தபோது, கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பணத்தை இழந்த முதியவர் சாமுவேல் சந்திரபோஸ் கோவை மாநகர சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, உடனடியாக தனிப்படை போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட்டனர். விசாரணையில் குஜராத் மாநிலத்தில் பதுங்கி இருந்த கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குஜராத் மாநிலம் சூரத் சென்ற தனிப்படையினர் மோசடி கும்பலைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.

சூரத் பகுதியைச் சேர்ந்த பத்லியா ரஜினி பாய் தல்ஷிபாய், விஸ்வபாய் ஹிமத்பாய் ரடாடியா, ரடாடியா சவன், கோஹில் விஜய் தயாள் பாய், ரத்தூர் ஜிதேந்திர சிங் சர்வன் சிங், கிராசே மகேந்திர சிங் தாகே சிங், சோவாடியா மிரல் மனோஜ் பாய், கபில் ராஜு பாய் கோத்ரே, சோ வாடியா மீட் மனோஜ் பாய் ,
பால் சந்தன் ஜெயநாத் ஆகிய 10 பேரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

இவர்களிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாய் பணம், 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஸ்வைப்பிங் மெஷின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இவர்களின் வங்கி கணக்கில் இருந்த 6 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பணம் முடக்கி வைக்கப்பட்டதுடன் விசாரணை நடைபெற்று வருகின்றது. கோவை போலீசார் குஜராத் சென்று அவர்களை கைது செய்து வந்துள்ள நிலையில், அவர்கள் இதேபோல வேறு யாரையும் மோசடி செய்திருக்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+