ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க ஹைடெக் கேமரா! தமிழக அரசு முன்னெடுக்கும் புது முயற்சி!
கோவை: ரயில் மோதி யானைகள் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள தமிழக அரசு, அதற்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் கோவை - வாளையாறு இடையேயான ரயில் தண்டவாளத்தில் யானை உயிரிழப்பு தொடர் கதையாக உள்ளது. ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக தமிழக வனத்துறை தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் யானை மீது ரயில் மோதுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா தண்டவாளங்களில் பொருத்தப்பட்டள்ளது.

யானைகள் தண்டவாளம் அருகே சென்றாலோ, தண்டவாளத்தில் உலவிக் கொண்டிருந்தாலோ செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை மூலம் ரயில் ஓட்டுநருக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டமாகவே, தனியாகவோ தண்டவாளப் பகுதிகளில் சுற்றித் திரியும் யானைகளை விரட்டும் அதிநவீன ட்ரோன் கேமராவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மதுக்கரையில் நிறுவப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கலந்துகொண்டார்.
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட ரயில் வழித்தடங்களில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 45 யானைகள் ரயில் மோதி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எட்டிமடை வாளையாறு இடையே ஓராண்டுக்கு முன்னர் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இனியும் இது போன்ற துயர நிகழ்வு தொடரக்கூடாது என்பதற்காக செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை -வாளையாறு இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் இப்போது நிறைவேறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications