ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க ஹைடெக் கேமரா! தமிழக அரசு முன்னெடுக்கும் புது முயற்சி!
கோவை: ரயில் மோதி யானைகள் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள தமிழக அரசு, அதற்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் கோவை - வாளையாறு இடையேயான ரயில் தண்டவாளத்தில் யானை உயிரிழப்பு தொடர் கதையாக உள்ளது. ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக தமிழக வனத்துறை தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் யானை மீது ரயில் மோதுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா தண்டவாளங்களில் பொருத்தப்பட்டள்ளது.

யானைகள் தண்டவாளம் அருகே சென்றாலோ, தண்டவாளத்தில் உலவிக் கொண்டிருந்தாலோ செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை மூலம் ரயில் ஓட்டுநருக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டமாகவே, தனியாகவோ தண்டவாளப் பகுதிகளில் சுற்றித் திரியும் யானைகளை விரட்டும் அதிநவீன ட்ரோன் கேமராவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மதுக்கரையில் நிறுவப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கலந்துகொண்டார்.
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட ரயில் வழித்தடங்களில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 45 யானைகள் ரயில் மோதி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எட்டிமடை வாளையாறு இடையே ஓராண்டுக்கு முன்னர் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இனியும் இது போன்ற துயர நிகழ்வு தொடரக்கூடாது என்பதற்காக செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை -வாளையாறு இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் இப்போது நிறைவேறியுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications