Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவைக்கு வந்த காஸ்ட்லி ட்ரோன்கள்.. மதிப்பு 1.15 கோடி.. சுங்கத்துறையிடம் சிக்கிய முக்கிய ஆதாரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சுங்க இலாக்கா அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். அப்படித்தான் சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து கோவை வந்து விமானங்களில் பயணிகளிடம் சோதனை நடத்தினார்கள். இதில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.15 கோடி மதிப்பிலான உயர் ரக ட்ரோன்கள் இருந்தது. அவற்றை சுங்க வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டுகிறது. தொழில் நகரமான கோவைக்கு பணி நிமித்தம் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

High-end drones worth Rs 1 15 crore seized at Coimbatore airport Key evidence seized by customs

இதில், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு ஒரு சில இடங்களில் இருந்து நேரடியாக விமான சேவை இல்லாததால், கேரளாவைச் சேர்ந்த பயணிகள் கோவை விமான நிலையம் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. அதே போல், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் கோவை வழியாக மீண்டும் நாடு திரும்புவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கம், அரிய வகை விலங்குகள், பறவைகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால், கோவை விமானநிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசார் விமான நிலையத்தில் சோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது நடந்த சோதனையில் பயணிகள் இருவரிடம் இருந்து (DJI Air 3S, Mini 4 Pro, Mavic 3 Pro, Avata 2, DJI Flip ) ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ளான உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையைப் போல் சென்னை விமான நிலையத்திலும் அடிக்கடி பயணிகள் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வந்து சிக்குகிறார்கள். கடந்த ஐந்து நாள் முன்பு தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் ரூ. 1 கோடி மதிப்புடைய, 2 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா கடத்தி வரப்பட்டது. அதனை கடத்தி வந்த வட மாநில பயணியை பிடித்து கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+